நவம்பர் 9,10 ஆகிய தேதிகளில் பொதுமக்களுக்கு திருவள்ளுவர் படத்தை விநியோகிக்க வேண்டும் என மாநில பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு மாநில தலைவர் நிர்மல் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இரண்டு நாட்களில் வீடுகள், அலுவலகங்கள், பொது இடங்களில் திருவள்ளுவர் படங்களை திறந்து மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும். இந்த நிகழ்ச்சியை #Thiruvalluvar என்ற ஹாஸ்டேக் மூலம் ட்விட்டர் மற்றும் முகநூலில் பதிவிட வேண்டுகோள். அதேபோல் 2020- ஆம் ஆண்டு நாட்காட்டிகளில் திருவள்ளுவர் படம் இடம்பெறுமாறு அச்சிட வேண்டும் எனவும் உத்தரவு.