சாலையில் தவறி விழுந்த பச்சிளம் குழந்தை உயிரிழப்பு!

Thiruvallur bike incident

சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி கையில் வைத்திருந்த பச்சிளம் குழந்தை சாலையில் தவறி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர், கீழச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் குணா-முத்தமிழ் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தையும், 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த மாதம் 24 ஆம் தேதி திருவள்ளூரை அடுத்துள்ள கே ஜி கண்டிகையில் உள்ள பள்ளி ஒன்றுக்கு குரூப் 4 தேர்வு எழுத முத்தமிழ் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். உடன் குழந்தைகளையும் அழைத்து சென்றுள்ளனர். தேர்வு முடிந்து மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் பேரம்பாக்கம் பகுதியில் பைக்கில் சென்ற தம்பதியினர் கீழே விழுந்தனர். அதில் அவர்களது 7 மாத குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டது. அதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மப்பேடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

bike incident police thiruvallur
இதையும் படியுங்கள்
Subscribe