Skip to main content

கள்ளச்சாராய வியாபாரிக்கு பிறந்தநாள்... கேக் ஊட்டி விழாவைச் சிறப்பித்த எஸ்.ஐ... அதிரடி நடவடிக்கை எடுத்த எஸ்.பி!

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

thiruppathur

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உமராபாத் காவல்நிலைய எல்லைக்குட்பட்டது மிட்டாளம் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் அஜீத். இவரை சில மாதங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் விற்பனை வழக்கில் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீன் பெற்று வெளியே வந்தார் அஜீத். இவர் மீது கள்ளச்சாராயம் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. 

 

அஜீத் தாய்மாமன் ஜானகிராமனும் கள்ளச்சாராய வியாபாரியாக உள்ளார். அந்த ஜானகிராமனும் கடந்த மாதம் கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இந்நிலையில் கடந்த 16.8.2020 அன்று சாராய வியாபாரி அஜித் தனது பிறந்தநாளை வீட்டில் நண்பர்கள், உறவினர்களுடன் கொண்டாடினார். இதில் உமராபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் கலந்து கொண்டுள்ளார். வருகை தந்த அதிகாரிக்கு சால்வை அணிவித்து வரவேற்பு தந்துள்ளார் அஜித். பதிலுக்கு சாராய வியாபாரிக்கு, எஸ்.ஐ. கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.  

 

இது குறித்து ரகசிய தகவல் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு கிடைத்து. பிறந்த நாள் விழாவில் சாராய வியாபாரிக்கு எஸ்.ஐ. கேக் ஊட்டும் படமும் அவருக்கு அனுப்பியுள்ளனர். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். 

 

முதல்வர் வரும் நேரத்தில் இது சர்ச்சையானால் பிரச்சனையாகிவிடும் என்பதை உணர்ந்து, உடனே விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். விசாரணையில் அனைத்தும் உண்மை எனத் தெரியவர, எஸ்.ஐ. விஸ்வநாதனை ஆயுதப்படைக்கு பணி மாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் எஸ்.பி. விஜயகுமார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பைசா செலவில்லாமல் சுகப்பிரசவம்! கவனிக்க வைக்கும் எதிர்ப்பு

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
People are struggle by posting notices in a different way demanding  repair road

திருப்பத்துார் மாவட்டம், பொம்மிகுப்பம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாதனவலசை, பழத்தோட்டம், ஓம்சக்தி நகர் கூட்டுரோடு பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், கர்ப்பிணிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கின்றனர்.

இந்நிலையில் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிகின்றது. இதனால் விரக்தியடைந்த கிராம மக்கள் இப்படிக்கு ஊர் மக்கள் சார்பில், என குறிப்பிட்டு நோட்டீஸ் ஒன்று சுற்றுவட்டார கிராமங்களில் விநியோகம் செய்துள்ளனர் மேலும் பொம்மிக்குப்பம் பல்வேறு பகுதிகளில் நோட்டீஸ் அடித்து ஒட்டி உள்ளனர். 

அதில், இன்றைய காலகட்டத்தில் பல கர்ப்பிணிப் பெண்களின் கனவு சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்று கொள்வதுதான். இவர்களின் கனவை நனவாக்க அதிசய சாலை திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ளது. எத்தனையோ மருத்துவர்கள், மகப்பேறு காலத்தில் அறுவை சிகிச்சை செய்தால் தான் தாயும் சேயும் நலமாக இருப்பார்கள் என்று சொல்வது உண்டு. இதனால் மருத்துவ செலவை எண்ணி நினைக்கும் போதே கர்ப்பிணிப் பெண்கள் மனமுடைந்து விடுகின்றனர். 

People are struggle by posting notices in a different way demanding  repair road

அவர்களின் துயரத்தை போக்கத்தான் இங்கு அதிசய சாலை உள்ளது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் இந்த சாலையில் தற்செயலாக பயணம் செய்யும் போதே சுகப்பிரசவமாக குழந்தை பெற்று உள்ளனர் என அச்சடிக்கப்பட்டுள்ளது. 

மேலும் குறிப்பு எனக்கூறி, அரசு மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவர்கள், பொம்மிகுப்பம் ஊராட்சி மன்றத்தின் முறையான அனுமதி பெற்ற பிறகே பயணம் செய்ய வேண்டும். மீறி கர்ப்பிணிப் பெண்கள் பயணம் செய்தால், நாங்கள் பொறுப்பல்ல என்பதை தங்களின் பணிவான கவனத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு வித்தியாசமாக தங்களது எதிர்ப்பினை அந்த கிராம மக்கள் வெளிக்காட்டியுள்ளது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

Next Story

பெற்றோர்களின் எதிர்ப்பால் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Love couple takes refuge in police station due to opposition from parents

பெற்றோர்களின் எதிர்ப்பால் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பி.பந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த வேலுமணி மகன் தினேஷ்குமார்(26) ஊதுபத்தி கம்பெனியில் மெக்கானிக்காக பணியாற்றுகிறார். ஆம்பூர் அடுத்த சானாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன் மகள் ஜீவிதா(21) கத்தாரி பகுதியில் தனது தாத்தா வீட்டில் தங்கி ஊதுபத்தி கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

கடந்த ஆறு மாதங்களாக தினேஷ்குமார் மற்றும் ஜீவிதா காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வீட்டில் பெற்றோர்களிடம் காதலித்து வருவதாகத் தெரிவித்த நிலையில், பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது.  

இந்நிலையில், காதலர்கள் இருவரும் தங்களுடைய காதலை மறக்க முடியாமல் பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி, வீட்டை விட்டு வெளியேறி ஆந்திரா பகுதிக்குச் சென்று திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நாட்றம்பள்ளி காவல்துறை, காதலர்களின் பெற்றோர்களை அழைத்து இருவரும் மேஜர் என்பதால் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.