Skip to main content

அன்று அமைச்சர் இன்று ஆட்சியர்... தினமும் நடக்கும் மலைகிராம மக்கள்! 

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

Thirupattur Collector visit Neknamalai village by walk
                                                          மாதிரி படம் 

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ளது நெக்னாமலை எனும் மலைக் கிராமம். இந்த மலைக் கிராமத்தின் மக்கள் தங்கள் கிராமத்திலிருந்து எந்த ஒரு அடிப்படைத் தேவைக்கும் 14 கி.மீ. கீழே இறங்கி வர வேண்டும். ஆனால், மலை பாதையான அந்த 14 கி.மீ.க்கும் எந்தவொரு சாலை வசதியும் கிடையாது. இவர்கள் இப்படியே 73 ஆண்டுகாலமாக தவித்துவருகின்றனர். 

 

இந்தக் கிராமத்திற்கு சாலை வசதி வேண்டுமென அம்மக்களும் நீண்டகாலமாக அரசிடம் கோரிக்கை வைத்துவருகின்றனர். 2020ஆம் ஆண்டு கரோனா பரவியபோது, அப்போதைய அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணி இந்தக் கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகச் சென்றார். அப்போது அவரும் அந்த மலைப் பாதையில் நடைப் பயணமாகவே கிராமத்தைச் சென்றடைந்தார். அப்போதும் அங்கிருந்தவர்கள் அவரிடம் கோரிக்கை வைத்தனர். ஒரு கட்டத்திற்கு மேல், எந்த நடவடிக்கையும் இல்லாததால், கிராம மக்கள் தாங்களாகவே மணல் கொட்டி அதனை சமன் செய்து பாதையை உருவாக்கினர். 

 

ஆனால், கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக அந்த மணல் பாதையும் மாயமாகிப்போனது. இந்நிலையில், நேற்று (28.09.2021) காலை 11 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா திடீரென மலைப் பகுதிக்குச் செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று அவர் மலை அடிவாரம் வரை காரில் சென்றுவிட்டு, பின்பு 14 கிலோமீட்டர் தூரம் அதிகாரிகளுடன் நடந்தே சென்று மலைவாழ் மக்களிடம் குறைகளைக் கேட்டார். 

 

அங்கு வசிக்கும் 82 பேருக்குப் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் தலா, 2.70 லட்சம் ரூபாய் மதிப்பில் மொத்தம் 2.20 கோடி ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டும் பணி நடந்துவருவதை ஆட்சியர் பார்வையிட்டார். மேலும், கழிவறைகள் கட்ட 80 பேருக்குத் தலா 12 ஆயிரத்து 500 ரூபாய் ஒதுக்கீடு செய்த உத்தரவையும் வழங்கினார். மேலும், இங்கு வாழும் மக்களுக்கு குளோரின் கலந்த குடிநீர் வழங்கவும், அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்க ஊராட்சி செயலாளருக்கு உத்தரவிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.டி. ரெய்டில் ரூ. 40 லட்சம் பறிமுதல்; திருப்பத்தூரில் பரபரப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
IT Raid Rs. 40 lakh forfeited; Busy in Tiruppathur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதே சமயம் திருப்பத்தூர் மாவட்டம் திருநாதர் முதலியார் என்ற பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் போட்டோ ஸ்டுடியோ, ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி. ரமேஷின் அக்காள் மருமகன் ஆவார். இத்தகைய சூழலில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து வருமான வரித்துறையினருக்கு தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நவீன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது ரூ. 40 லட்சம் ரொக்கம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  வருமான வரித்துறை சோத்னையின் மூலம்  ரூ. 40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மாற்றுத்திறனாளி சிறுவனை தனியார் பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துநர்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
conductor refused to board the differently-abled son in the private bus

திருப்பத்தூர் மாவட்டம், விசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குப்தா. இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு 14 வயதில் மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இவரை இன்று இவருடைய அம்மா வெண்ணிலா திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் விசமங்கலத்தில் உள்ள வீட்டிற்குச் செல்வதற்காக திருவண்ணாமலை செல்லும் தனியார் பேருந்தில் மாற்றுத்திறனாளியான மகனை ஏற்றி சீட்டில் உட்கார வைத்துள்ளார். அப்போது மாற்றுத்திறனாளி மகனைத் தனியார் பேருந்தின் நடத்துநர் கீழே இறக்கி விட்டுள்ளார். 

ஆத்திரம் அடைந்த அவரின் தாயார் வெண்ணிலா மற்றொரு பேருந்தில் விசமங்கலம் பகுதிக்கு வந்து சாலையில் கல்லை வைத்து கையில் பெட்ரோல் கேனுடன் திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டார்.

conductor refused to board the differently-abled son in the private bus

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆய்வாளர் ரேகா மதி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.