Skip to main content

முகிலன் மீட்புக்கு முன் திருப்பதியில் நடந்தது என்ன?

Published on 07/07/2019 | Edited on 07/07/2019

திருப்பதியில் நேற்று ஜூலை ஆறாம் தேதி மதியம் 12 மணியளவில் மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயில் முன் நின்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்க, 8 வழி சாலை திட்டத்தை கைவிடுக என கோசம் வைத்தார் முகிலன். இதை பார்த்த திருப்பதி ரயில்வே போலீசார் முகிலனை தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தி பிளாட்பாமுக்கு அழைத்து வந்துள்ளனர்.

 This is what happened at the turn before Mukhilan's arrest


அங்கிருந்து அவரை ரயில்வே போலீசாரின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் பொழுது ஜோலார்பேட்டையில் இருந்து ராஜமுந்திரி ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த முகிலனின் நண்பர் சண்முகம் என்பவர் இதனை பார்த்துவிட்டு உடனடியாக இது தொடர்பாக அவரது மனைவிக்கும், அவரது நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலை தொடர்ந்து அவர்கள் தமிழக போலீசாரிடம் விவரம் கேட்டுள்ளனர். 

எங்களுக்கு அது பற்றி தெரியாது விசாரிக்கிறோம் என தமிழக போலீசாரும் தெரிவித்தனர். அதன்பின் தமிழக போலீசார் திருப்பதி போலீசாரை தொடர்பு கொண்டு முகிலனை பற்றி தகவல் கேட்டுள்ளனர். திருப்பதி எஸ்பி எங்களுக்கு அது போன்ற தகவல் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளனர். அதனையடுத்து திருப்பதி போலீசார் ரயில்வே போலீசாரிடம் இதுகுறித்து கேட்டபோது, இன்று மூன்று பேரை மட்டும் கைது செய்துள்ளோம். அவர்களை நெல்லூர் நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்து உள்ளோம் என தகவல் கூறியுள்ளனர். வேற யாரையாவது கைது செய்துள்ளீர்களா என விசாரித்தபோது ஒரே ஒரு நபரை பிடித்து வைத்துள்ளோம் அவர் பார்ப்பதற்கு மனநலம் பாதிக்கப்பட்டது போல் உள்ளார். அவரை நாங்கள் காட்பாடிக்கு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளனர். 

இதுபற்றி திருப்பதி எஸ்பி சைத்தையா கூறும் பொழுது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்தார், தமிழில் மட்டுமே பேசினார் அவரிடம் விசாரித்த பொழுது என்னை காட்பாடியில் கொண்டு சென்று விட்டு விடுங்கள் என சொன்னார், மதியம் அவருக்கு உணவு வாங்கிக் கொடுத்ததும் சாப்பிட்டுவிட்டு உறங்கிவிட்டார். இப்பொழுது திருப்பதியில் இருந்து காட்பாடி பயணிகள் ரயிலில் அவரை அனுப்பி வைத்துள்ளோம் என தகவல் கூறியுள்ளார்.

அதன் பின்னே காட்பாடிக்கு முகிலன் வருவதை உறுதி செய்துகொண்ட தமிழக போலீசார் அவரை காட்பாடி ரயில்வே போலீசாரிடம் இருந்து மீட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து  சென்று மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனை முடிந்ததும் தற்போது சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையில், திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்ட முகிலனை நாய் கடித்துள்ளதாக சிபிசிஐடி விசாரணையில் தகவல் வந்துள்ளது. அடுக்கம்பாறை மருத்துவமனையில் முகிலனை பரிசோதித்தபோது நாய் கடித்ததற்கான காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் மருத்துவ சோதனையின் போது ஒரு வாரத்திற்கு முன்புதான் நாய் கடித்ததாக மருத்துவரிடம் முகிலன் கூறியுள்ளதாகவும் சிபிசிஐடி விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.