Skip to main content

படிதாண்டிய பாவம்... பாசமறியா காமம்...

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

நெல்லை மாவட்டத்தின் பூலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ். அதே மாவட்டத்தின் பழங்கோட்டைப் பகுதியில் மின் துறையில் மின் கணக்கெடுப்பு பணியிலிருப்பவர். இவருக்கும் நாலுவாசன் கோட்டையின் செல்லையாவின் மகளான வடகாசிக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது தற்போது தானேஷ்பிரபாகரன் என்கிற ஒன்றரை வயதுக் குழந்தையுமிருக்கிறது. ராஜ் தன் மனைவி வடகாசியுடன் பழங்கோட்டையில் வசித்து வருகிறார். மின்துறைப் பணி என்பதால் இரவு பகல் ஷிப்ட்கள் தொடர்ந்து வருதால் அடிக்கடி வீடு வருகிற சந்தர்ப்பம் அரிதாகியிருக்கிறது. அதோடு அவருக்கு குடிப்பழக்கமும் உண்டு.

 

thirunelveli

 

 

இந்த நிலையில் அருகில் உள்ள கழுகுமலையைச் சேர்ந்த சாமிநாதன் பால் வியாபாரம் செய்து வருகிறவர். பழங்கோட்டைப் பகுதியிலும் பால்விற்பனை செய்பவர். திருமணமாகி இரண்டு குழந்தைகளிருக்கின்றன. பால் வியாபாரி என்பதால் அவருக்கு வடகாசியுடன் பழகும் சந்தர்ப்பம் தினமும் கிடைத்திருக்கிறது. இது நெருக்கமாகி இருவருக்கும் உறவுத் தொடர்புகள் உண்டானது. பல மாதங்கள் இந்த உறவு தொடர, ஒரு சந்தர்ப்பத்தில் இதையறிந்த ராஜ், தன் மனைவியைக் கண்டித்திருக்கிறார். ஆனாலும் இருவருக்குமான தொடர்புகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில்தான் குழந்தை பிறந்து ஒன்றரை வயதாகியிருக்கிறது. இதனிடையே வடகாசியை பழங்கோட்டைக்கு சந்திக்க வருவதற்கு சிரமமாக இருப்பதால் அவ்வப்போது சந்தித்து சந்தோஷமாக இருப்பதற்கு வசதியாக கழுகுமலையில் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தியிருக்கிறார் சாமிநாதன். இந்த வீட்டில் அடிக்கடி சாமிநாதனும், வடகாசியும் ரகசியமாகச் சந்தித்து வந்திருக்கின்றனர்.

இதையறிந்த கணவன் ராஜ், தன் மனைவியைக் கண்டிக்க, அவளோ பிள்ளையைத் தன் தாய் வீட்டில் விட்டுவிட்டு, கழுகுமலை வந்திருக்கிறாள். இதையடுத்து பிள்ளையை வாங்கி வரச் சொல்லியிருக்கிற ராஜ். குழந்தையை வாங்கச் சென்ற வடகாசி, கிராமத்திற்குச் செல்லாமல் கடந்த 4ம் தேதி இரவு குழந்தையுடன் கழுகுமலை வீட்டிற்கு வந்திருக்கிறாள். அப்போது குடித்து விட்டு வந்த கள்ளக் காதலன் சாமிநாதன் இரவு வடகாசியுடன் உறவிலிருந்த போது தொட்டிலில் இருந்த குழந்தை அழுதிருக்கிறது. அது இடைஞ்சலாக இருந்ததால் குடி வெறியில் தன் காலால் தொட்டிலை ஒங்கி மிதித்திருக்கிறான். வேகத்தில் தொட்டில் பக்கத்துச் சுவரில் மோதியதில் குழந்தையின் மண்டை உடைந்து ரத்தம் வழிய துடித்து அழுதிருக்கிறது. உடனே அந்த இரவில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு போயிருக்கிறார்கள், அங்கு குழந்தையைச் சோதனை செய்தவர்கள் ஏற்கனவே இறந்து விட்டது என்று சொல்லியிருக்கிறார்களாம். இதனிடையே வீடு திரும்பிய கணவன் ராஜ் மனைவியைக் காணாததால் கழுகுமலைக்கு வந்திருக்கிறார்.

இந்நிலையில் வடகாசி குழந்தையைச் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருக்கிறாள். குழந்தை இறந்து விட்ட நிலையிலிருந்ததையறிந்த டாக்டர்கள் விசாரித்ததில், மாடிப் படியிலிருந்து விழுந்து விட்டதாகச் சொல்ல சந்தேகப்பட்டவர்கள், கழுகுமலைப் போலீசுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். மருத்துவமனை வந்த இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, வடகாசி மற்றும் சாமிநாதனிடம் விசாரிக்க, அவர்கள் முரண்பாடான பதிலைச் சொல்லிருக்கிறார்கள். இதனிடையே கணவன் ராஜ் அங்கு வந்து சேர, விசாரிக்க வேண்டிய வகையில் விசாரித்த இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமியிடம், தங்களின் கள்ளத்தனமான உறவையும், குழந்தையின் மண்டை உடைபட்டதையும் சொல்லியிருக்கிறார்கள்.

விசாரணையில் நடந்தவற்றை ஒப்புக் கொண்டார்கள். சாமிநாதன் மற்றும் வடகாசியின் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்கிறார் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி.

மூளையைச் அடித்து நொறுக்கும் காமத்திற்கு பந்தம், பெற்ற பாசமெல்லாம் கால் தூசுக்குச் சமம் போல.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Case against Nayinar Nagendran!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்தச் சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, நெல்லையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (16-04-24)  விசாணைக்கு வருகிறது. 

Next Story

“தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது” - பிரதமர் மோடி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
PM Modi says DMK-Congress hates Tamil culture

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பிரதமர் மோடி இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “தமிழ் புத்தாண்டு தினத்தில் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தமிழ் மொழியை பா.ஜ.க உலக அளவில் பிரபலப்படுத்தும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்களை அமைக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது. குடும்ப கட்சியான காங்கிரஸ், காமராஜரை அவமதித்தது. எம்.ஜி.ஆர் புகழை திமுக அவமதித்தது. ஜெயலலிதாவை சட்டசபையில் மோசமாக நடத்தியது.

பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்வதை திமுக அரசு தடுக்கிறது. திமுகவும், காங்கிரஸும் தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக கச்சத்தீவை வேறொரு நாட்டுக்கு கொடுத்துவிட்டனர். கச்சத்தீவை தாரைவார்த்தது மன்னிக்க முடியாத பாவம். குடும்ப அரசியலை ஆதரிக்கும் கட்சியின் ஊழல் ஆட்சியால் தமிழ்நாடு துன்பப்படுகிறது” எனப் பேசினார்.