பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 4 நாட்கள் சிபிசிஐடி காவல் முடிந்த நிலையில் திருநாவுக்கரசு சிறையிலடைக்கப்பட்டார்.
காவல் முடிந்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் திருநாவுக்கரசு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது திருநாவுக்கரசுவுக்கு நாளைவரை நீதிமன்ற காவல் உள்ளதால் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருநாவுக்கரசு சிறையிலடைக்கப்பட்டார். மேலும் நாளை கோவை நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.