Skip to main content

கோடையில் திருநள்ளார் கோயிலில் குவியும் பக்தர்கள்...

Published on 13/05/2019 | Edited on 14/05/2019

கோடை விடுமுறை என்பதால் திருநள்ளார் கோவிலில் வழக்கமானதை விட பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் பொதுமக்களும் வந்துபோவது வர்த்தகர்களையும், கோவில் நிர்வாகத்தினரையும் நெகிழவைத்துள்ளது.
 

thirunallar t


காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாரில் ஸ்ரீ தர்ப்பனீஷ்வரர் கோவிலில் சனீஸ்வரனை தரிசிக்க சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அதே போல் கோடை விடுமுறை காலத்திலும் பக்தர்களின் வருகை அதிகமாக காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடைகாலத்தின் துவக்கத்தில் தேர்தல் வந்ததால் பக்கத்தர்களின் வருகை வெகுவாக குறைந்துபோனது. 

இந்த நிலையில் தேர்தலுக்குப் பிறகு பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்பதை உணர்ந்த கோவில் நிர்வாகம், பல்வேறு அடிப்படை வசதிகளை முன்கூட்டியே செய்யப்பட்டது. இக்கோயிலின் தனி அதிகாரியான காரைக்கால் மாவட்ட ஆட்சியர் கோவிலில் ஆய்வுசெய்து, எளிய முறையில் தரிசனம் செய்யவும், நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கவும், வழக்கமான அன்னதானத்தைவிட கூடுதலாக வழங்கவும், கோவிலில் மூலவர் சன்னதிக்கு செல்வோர் சிரமமின்றி செல்லவும், கூடுதல் மின் விசிறிகள், குளிர்சாதனம் உள்ளிட்ட சிறப்பு வசதிகளை ஏற்படுத்துமாறும் கோயில் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தினார். இதன்படி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருக்கிறது.

இதன்மூலம் தினசரி காலை 9 மணி முதல் நளன் குளத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களுக்கு புதுச்சேரி போலீசாரும், கோயில் ஊழியர்களும் பக்தர்களை முறைப்படுத்தி அனுப்பிவருகின்றனர். வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. ராஜகோபுரம் வழியாக வெளியேறும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தினசரி பகல் 12 மணி வரை கூட்டம்  ஏறக்குறைய 50 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்ய வருகிறார்கள் எனவும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து, திருநள்ளார் வர்த்தகர்கள் கூறுகையில், “எப்போதுமே கோடைகாலத்தில் பக்தர்களை தாண்டி, சுற்றுலாவாகவருபவர்களும் அதிகமாக இருக்கும், இந்தவருட ஆரம்பத்தில் கூட்டம் இல்லாமல் போனதால், எங்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஆகிடுச்சி, இதை நம்பி கூடுதலாக வட்டிக்கு கடன் வாங்கி, கூடுதலா பொருள் வாங்கிபோட்டிருக்கிறோம், ஆரம்பத்தில் கூட்டம் இல்லாமல் போனதும் வருத்தமடைந்தோம். பிறகு கூட்டம் வரத்துவங்கியதுமே ஆறுதலாக இருக்கிறது." என்கிறார்கள்.

அங்குவந்திருந்த பக்தர்கள் கூறுகையில், “மூலவரை தரிசனம் செய்துவிட்டு சனீஸ்வர பகவானை தரிசிக்க வரும் வகையில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளதால். கோயிலுக்கு வயதானவர்கள் படிகளில் ஏறி இறங்க சிரமப்படும் நிலமையாகுது. அதோடு கூட்டமும் தேங்குகிறது. எனவே இப்பிரச்சினையில் கோயில் நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்." என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநள்ளாறு அர்ச்சகருக்கே விபூதி அடித்த இருவர்; 10 மாதங்களுக்குப் பிறகு சிக்கி சிறை!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Burglary at Tirunallaru priest's house; After 10 months, two people were caught

சனி பகவான் கோவிலுக்குப் பெயர் போன திருநள்ளாற்றில், அர்ச்சகர் வீட்டில் தங்கியிருந்த இரண்டு நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் பிடித்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனி பகவான் கோவில். திருநள்ளாறு பெருமாள் கோவில் தெருவில் ரோகிணி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநள்ளாறு கோவிலில் 40 ஆண்டுகளாக அர்ச்சகராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 21/04/2023 ஆம் தேதி அர்ச்சகர் ரோகிணி இடத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி வெங்கடேஷ் என்ற நபரும், ஒரு பெண்மணியும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

நீங்கள் பூஜை செய்துதான் கடந்த ஆண்டு எங்களுடைய மகளுக்குத் திருமணம் நடைபெற்றது என்ற இருவர், இந்த வருடம் தன் மகனுக்குத் திருமணம் நடைபெற வேண்டும் அதற்காகப் பரிகார பூஜைகளை செய்து தாருங்கள் எனக் கேட்டுள்ளனர். இதை நம்பிய ரோகிணி, அவர்களை நாளை காலை வரும்படி தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் இங்கு தங்க அறை கிடைக்கவில்லை என்பதால் உங்கள் வீட்டில் நாங்கள் தங்கிக் கொள்கிறோம். நாளை காலை பூஜை முடித்துக் கொண்டு நாங்கள் சென்று விடுவோம் எனத் தெரிவித்தனர்.

அதை நம்பிய அர்ச்சகர், அவர்கள் இருவரையும் வீட்டில் தங்க வைத்துள்ளார். ஆனால் அடுத்த நாள் காலை எழுந்த பொழுது வீட்டில் இருவரும் இல்லாததைக் கண்டு அதிர்ந்துள்ளார். அப்பொழுது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 20 பவுன் நகை மற்றும் 1.5 லட்சம் ரூபாய் ரொக்கம், வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக திருநள்ளாறு காவல் நிலையத்தில் அர்ச்சகர் புகார் அளித்துள்ளார். அவருடைய புகாரை அடுத்து போலீசார் இரண்டு பேரையும் தேடி வந்தனர். கடந்த 10 மாதங்களாக போலீசார் தேடி வந்த நிலையில், சிசிடிசி காட்சிகளின் அடிப்படையில் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சுபலட்சமி, வேலாயுதம் என்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் தாய், மகன் இல்லை மாமியார் மருமகன் என்பது தெரிய வந்தது. சம்பவத்தன்று ஹோட்டல் உணவில் மயக்க மருந்தை போட்டு அர்ச்சகர் ரோகிணிக்கும் அவரது மனைவிக்கும் கொடுத்த இவர்கள், இருவரும் மயங்கிய நேரத்தில் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்து விட்டுச் சென்றது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து நகை, பணம் மீட்கப்பட்ட நிலையில் இருவரையும் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Next Story

பரிகாரம் செய்ய வந்தவர்களின் பகீர் கொள்ளை; திருநள்ளாறு கோவில் அர்ச்சகர் புகார்   

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

 Thirunallaru temple priest complains; about robbery of those who came to do penance

 

சனி பகவான் கோவிலுக்கு பெயர்போன திருநள்ளாறில் அர்ச்சகர் வீட்டில் தங்கியிருந்த இரண்டு நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனி பகவான் கோவில். திருநள்ளாறு பெருமாள் கோவில் தெருவில் ரோகிணி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநள்ளாறு கோவிலில் 40 ஆண்டுகளாக அர்ச்சகராக பணிபுரிந்து வந்தார். கடந்த 21ஆம் தேதி அர்ச்சகர் ரோகிணியிடத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி வெங்கடேஷ் என்ற 50 வயது நபரும்,  50 வயது பெண்மணியும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

 

நீங்கள் பூஜை செய்துதான் கடந்த ஆண்டு எங்களுடைய மகளுக்கு திருமணம் நடைபெற்றது என்ற இருவர், இந்த வருடம் தன் மகனுக்கு திருமணம் நடைபெற வேண்டும் அதற்காக பரிகார பூஜைகளை செய்து தாருங்கள் எனக் கேட்டுள்ளனர். இதனை நம்பிய ரோகிணி அவர்களை நாளை காலை வரும்படி தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் இங்கு தங்க அறை கிடைக்கவில்லை என்பதால் உங்கள் வீட்டில் நாங்கள் தங்கிக் கொள்கிறோம். நாளை காலை பூஜை முடித்துக் கொண்டு நாங்கள் சென்று விடுவோம் என தெரிவித்தனர்.

 

அதனை நம்பி அர்ச்சகர் அவர்கள் இருவரையும் வீட்டில் தங்க வைத்துள்ளார். ஆனால் அடுத்த நாள் காலை எழுந்த பொழுது வீட்டில் இருவரும் இல்லாததைக் கண்டு அதிர்ந்துள்ளார். அப்பொழுது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த நகை 20 பவுன் நகை மற்றும் 1.5 லட்சம் ரூபாய் ரொக்கம், வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக திருநள்ளாறு காவல் நிலையத்தில் அர்ச்சகர் புகார் அளித்துள்ளார். அவருடைய புகாரை அடுத்து போலீசார் இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.