மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட UAPA வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு சென்னையில் பிரிவிணைவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் UAPA பிரிவை மட்டும் ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.