Skip to main content

ராமதாஸ் மோசமான பிற்போக்கு அரசியலை கையிலெடுத்துள்ளார்- திருமாவளவன் பேச்சு

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

சிதம்பரம் மக்களை தொகுதியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  பானைச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.

 

thirumavalavan speech about ramadoss pmk

 

கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கட்சியினருடன் வந்து சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகூறி நூல் வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில்,"வாக்கு எண்ணிக்கைக்கு அடுத்தநாள் அதிகாலை 3 மணிவரை இவரது வெற்றி அனைவரையும் எதிர்பாக்கவைத்தது. இவரும் திமுக கூட்டணியில் வெற்றி பெற்றவர்களை போல் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தால் யாருடைய கவனத்தையும் ஈர்த்து இருக்கமாட்டார். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரம், பணபலத்தில் மிதந்த பாஜக,அதிமுக கூட்டுவைத்துகொண்டு ஒரு இடத்தில் தான் வெற்றி பெறமுடிந்தது. இதற்கு மதசார்பற்ற அணிகள் ஒன்றிணைந்து போராட்டத்தின் வாயிலாக மோடி அம்பலத்தை வெளிபடுத்தியது தான் காரணம். இதில் கூட்டணி அமைத்ததில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு உள்ளது. தமிழகத்தில் தாமரை எக்காலத்திலும் மலராது, கருகி போய்விடும் என்பதை இந்த தேர்தல் மூலம் தமிழிசை அறிந்திருப்பார். அதே நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த ராமராஸின் சாதிய முகத்திரையை மக்கள் கிழித்தெறிந்தது வரலாற்று சாதனை. திருமா இந்த தொகுதியில் வெற்றி பெறக் கூடாது என்று அதிமுகவை தாண்டி பாமக சாதியை முன்னெடுத்து, அணிதிரட்டி வேலை செய்தது. இதில் அன்புமணியை வெற்றிபெற வைக்க வக்கில்லாமல், திருமாவை தோற்கடிக்க சாதிய அணித் திரட்டல் யாருக்கு லாபம். சாதிய முரண்பாடுகளை  கலைந்து சகோதரத்துவமாக இருப்பவர்களிடம் சாதிமோதலை உருவாக்கி குளிர்காய நினைத்த ராமதாஸின் கனவு தவுடுபொடியாகிவிட்டது. அவதூறுகளை புறம்தள்ளி வெற்றிபெற்ற தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல நாட்டுமக்களின் குறைகளை நாடளுமன்றத்தில் ஒலிக்க செய்து முத்திரை பதிப்பார்" என்று வாழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து  தொல். திருமாவளவன் பேசுகையில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற அரும் பாடுபட்ட அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மேலும், "திமுக தலைவர் ஸ்டாலின் சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருமா இங்கே வெற்றி பெற்றால் அது திருமாவின் வெற்றி அல்ல இது கலைஞரின் வெற்றி என்ற வார்த்தை எவ்வளவு வலிமை மிக்கது  என்று அறிந்து திமுகவின் தோழர்கள் பணியாற்றினார்கள். சிதம்பரம் தொகுதியில் அவதூறுகளையும் வதந்திகளையும் புறந்தள்ளி மக்கள் வெற்றியடைய செய்துள்ளனர்.  ராமதாஸ் அரசியலுகாக என் மீது அவதூறுகளை பரப்பி வருகிறார்.  அவர் மோசமான பிற்போக்கு அரசியலைக் கையில் எடுத்துள்ளார்.  நான் சிதம்பரம் தொகுதி  மக்கள் மீது நம்பிக்கை வைத்தது வீண்போகவில்லை.  ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்..இந்த பகுதியில் சாயப்பட்டறை பிரச்சனை, சாலை பிரச்சனை உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரச்சனைகளும் திர்க்க நடவடிக்கை எடுப்பேன்.  எனக்கு வாக்களித்தவர்களுகும், வாக்களிக்காதவர்களுக்கும் சிறந்த மக்களை உறுப்பினராக செயல்படுவேன். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தான்தோன்றித் தனமாக சமூகவலைதளங்களில் பதிவு செய்யவேண்டாம்" என்று கூறினார்.

கூட்டத்தில் திமுக குமராட்சி ஒன்றிய செயலாளர் மாமல்லன், சிதம்பரம் நகரசெயலாளர் செந்தில்குமார், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலார் முத்துபெருமாள், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ரமேஷ்பாபு, மாவட்டக்குழு வாஞ்சிநாதன்,ராஜா, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் நகர்பெரியசாமி, மதிமுக மாவட்ட செயலாளர் குணசேகரன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் முடிவண்ணன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் இளங்கோ, கூட்டணி கட்சிகளை சார்ந்த மாவட்ட செயலாளர்கள் சவுகத்அலி, அப்துல்சுக்கூர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் தொல். திருமா சால்வை அணிவித்து நன்றி தெரிவித்து கொண்டார். இதேபோல் காட்டுமன்னார் கோயில், புவனகிரி பகுதியிலும் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.