Skip to main content

''அடுத்தமுறை பாஜக வந்தால் நாட்டை காப்பாற்ற முடியாது... தமிழகத்திற்கும் இது நல்லதல்ல!'' - திருமா பேச்சு!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

thirumavalavan speech

 

விசிக சார்பில் சென்னை வேப்பேரியில் விருது வழங்கும் விழா நடைபெற்றுவருகிறது. இவ்விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருதும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு பெரியார் ஒளி விருதும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விருதுகளை வழங்கிவிட்டு வாழ்த்துரை ஆற்றினார். ''இந்த விருது பெறுவர்களில் முதல்வர் வரிசையில் 4வது நபராகப் பெறுகிறார் முதல்வர் ஸ்டாலின். திமுகவுடனான உறவு தேர்தல் சார்ந்த உறவு அல்ல, எங்கள் உறவு கொள்கை சார்ந்த உறவு. ஒருமுறை கலைஞர் அவர்கள் சொன்னார், ‘எங்களுக்கும் விசிகவிற்குமான உறவு கொள்கை ரீதியான உறவு’ என்றார். அந்தவகையில் நீடித்துவருகிறது. திமுகவுடன் நின்றால்தான் பிற்போக்கு சக்திகளை முறியடிக்க முடியும். நாங்கள் வேண்டுகோளை முன்வைக்கிறோம். அகில இந்திய அளவில் பாஜகவிற்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்கக் கூடிய ஆற்றல் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் உள்ளது. ஆகையால் மற்ற மாநிலத்தவரை ஒருங்கிணைத்து பிஜேபிக்கு எதிரான தளத்தில் நிற்க வேண்டும். அடுத்தமுறை பாஜக வந்தால் நாட்டைக் காப்பாற்ற முடியாது. தமிழகத்திற்கும் இது நல்லதல்ல. நீங்கள் தமிழகத்தில் உள்ள அல்லு சில்லுகளைப் பற்றி கவலைகொள்ளாமல், அற்பர்களைப் பற்றி கவலைகொள்ளாமல் அகில இந்திய அளவில் நீங்கள் கவனம்கொள்ள வேண்டும்.

 

காங்கிரஸ் இல்லாத ஒரு அணியை நாம் கட்டினால் அது பாஜகவிற்கு சாதகமாக முடியும். உங்களைக் குறைத்து மதிப்பிட்டவர்களுக்குப் பேரிடியாக தேர்தல் வெற்றி மூலம் பதில் அளித்த முதல்வர் நீங்கள். அந்த துணிச்சல்கள் எங்கிருந்து வந்தது என்றால், பெரியார் மடியில் விளையாட, அண்ணாவின் அரவணைப்பில் இருக்க வாய்ப்பு உங்களுக்கு கிடைத்ததால்தான் இது முடிந்துள்ளது. அந்த வழிவந்த நீங்கள், வியூகம் அமைப்பதில் கலைஞரைப் போல் செயல்பட வேண்டும். திமுகவுடன் என்றும் நாங்கள் தோள்கொடுத்து நிற்போம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எரியுதுடி மாலா ஃபேன போடு என கதறுகிறது பாஜக'-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு  

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
BJP shouts 'Eriyuthudi malaa fana potu' - Chief Minister M.K.Stal's speech

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்பில் ஈடுபட்டு வருகிறது. சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். மேடையில் பேசிய அவர், 'திருமாவளவனை வெற்றி பெறவைக்க வேங்கையின் மைந்தன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தையும், அரியலூர் அரிமா எஸ்.எஸ்.சிவசங்கரையும் இறக்கி விட்டிருக்கிறேன். ஒரு சிறுத்தைக்காக இரண்டு சிங்கங்கள் களத்தில் இருக்கின்றன. அதேபோல் மயிலாடுதுறையின் நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதா வெற்றி பெற கை சின்னத்தில் வாக்குகளை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தயாராகி விட்டீர்களா? இரண்டு பேரையும் வெற்றி பெற வைக்க தயாராகி விட்டீர்களா? இந்த மு.க.ஸ்டாலின் தூதுவர்களாக உங்கள் பகுதியில் உள்ள மக்களிடமும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகளை திரட்ட வேண்டும். தமிழ்நாட்டின் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒருவர் பிரதமராக நீங்கள் வாக்களிக்க வேண்டும். சமூகநீதியை காண்கின்ற ஒரு பிரதமர் டெல்லியில் அமர வாக்களிக்க வேண்டும். சமூக நல்லிணக்கம், மதச்சார்பின்மை, அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் ஒரு பிரதமர் நாட்டை ஆள்வதற்கு வாக்களிக்க வேண்டும்.

இப்பொழுது இருக்கிற பிரதமர் மோடிக்கு சமூகநீதி மேல் அக்கறை இல்லை. மதச்சார்பின்மையை  மருந்துக்கு கூட நினைப்பதில்லை. சமத்துவத்திற்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவை அவருக்கு பிடிக்கவில்லை. மொத்தத்தில் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை பகையாளி இந்தியாவாக மாற்ற நினைக்கும் ஒரு பிரதமர் நமக்கு தேவையில்லை.

இந்த தேர்தல் மூலமாக இரண்டாம் விடுதலை போராட்ட வரலாற்றை எழுத நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு. தமிழ்நாட்டில் வேரூன்றியுள்ள சமூகநீதி இந்தியா முழுக்க பரவ கிடைத்த வாய்ப்பு தான் இந்தியா கூட்டணி. சமூக நீதி நமக்கு சும்மா கிடைத்ததில்லை. தியாகத்தால் விளைந்தது தான் சமூக நீதி. சமூக நீதிதான் ஒன்றும் ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்திக் கொண்டிருக்கிறது. நாட்டுக்கே வழிகாட்டக் கூடிய வகையில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு இருக்கிறது என்றால் அதற்கு காரணம் திராவிட இயக்கமும் நம்முடைய கலைஞரும்தான். இரண்டு மூன்று தலைமுறையாகதான் நம்ம வீட்டில் இருந்து இன்ஜினியர்கள், டாக்டர்கள் வாரார்கள். முன்பு அத்திப்பூத்த மாதிரி சில ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வர முடிந்தது. ஆனால் இப்பொழுது அதிகம் வர முடிகிறது. இதெல்லாம் பாஜகவினுடைய கண்ணை உறுத்துகிறது. இந்த வேலைக்கு இவர்களெல்லாம் இட ஒதுக்கீடால் வந்து விடுகிறார்களே என நினைக்கிறார்கள். 'எரியுதுடி மாலா ஃபேன போடு' என்று கதறுவார்கள். இட ஒதுக்கீட்டை நம்மிடம் இருந்து தட்டிப்பறித்து நம்ம குழந்தைகள் படித்து வேலைக்கு போவதை எடுக்க என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறார்கள். இப்படிப்பட்ட பாஜகவுடன் தான் பாமக கூட்டணி பேசியிருக்கிறது'' என்றார்.

 

Next Story

'பானை சின்னத்தை வாங்கியதால் பாதி வெற்றி பெற்றுள்ளோம்' உதயநிதி ஸ்டாலின் சிதம்பரத்தில் பேச்சு

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
Having bought the pot symbol, we have won half of it' Udhayanidhi Stalin's speech in Chidambaram

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார். இவருக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் வேன் மூலம் சிதம்பரம் தெற்கு வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''நாடாளுமன்றத் தேர்தலுக்கு இதுவரை 15 தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். இது பிரச்சாரம் கூட்டம் போல் தெரியவில்லை. வெற்றி விழா போல் உள்ளது.

இங்கே வரும்போது ஒரு நல்ல செய்தியோட வந்துள்ளேன் 30ந்தேதி மாலை பானை சின்னம் விசிகவுக்கு உறுதியாகிவிட்டது.  ஒன்றிய பாஜக அரசு அவர்களுடன் கூட்டு வைத்துள்ள அனைத்து கட்சிகளுக்கும் என்ன சின்ன வேண்டுமானாலும் கொடுத்துள்ளார்கள்.  இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னத்தை கொடுக்க முடியாது என்கிறனர். இதற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் தோழர்கள், வழக்கறிஞர்கள் வெற்றிகரமாக நீதிமன்றத்தில் வாதாடி பானை சின்னத்தை பெற்றுள்ளார்கள். பானை சின்னத்தை வாங்கியதால் பாதி வெற்றி பெற்றுள்ளோம்''என்றார்.

'வாக்களிக்க அனைவரும் முடிவெடுத்து விட்டீர்களா?'என  பொதுமக்களை பார்த்து கேட்க அனைவரும் 'முடிவெடுத்து விட்டோம்' என சத்தமாக கூறினார்கள். உங்களுக்கு  ஏப்ரல் 19ஆம் தேதி வாக்களிக்கும் போது பானை சின்னம் தான் தெரியும் தெரிய வேண்டும். அதில் நீங்க அழுத்துற பொத்தான் மோடிக்கு வைக்கும் வேட்டாக இருக்க வேண்டும். கடந்த முறை திருமாவளவன் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இந்த முறை 3 லட்சத்திற்கும் குறையாமல் அவர் வெற்றி பெற வேண்டும். ஏனென்றால் பானை சின்னம் அவரை தர மறுத்ததால் இந்த செய்தி இந்திய அளவில் பரவியுள்ளது. இது எப்படி வாங்கினார்கள் என்ற விவாதம் தொலைக்காட்சிகளில் வைரல் ஆகி வருகிறது. இந்த விளம்பரமே போதும் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.

சிதம்பரத்தில் புதிய பேருந்து நிலையம் 15 கோடியில், தேரோடும் வீதியில் 10 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் நடைபாதை அமைக்கப்படுகிறது, பெரியண்ணா குளம், ஞானபிரகாச குளம் சீரமைக்கப்பட்டுள்ளது. ரூ 143 கோடி செலவில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ47 கோடியில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இது திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2.5 ஆண்டு கால ஆட்சியில் செய்யப்பட்டுள்ளது. 42 கோடிக்கு திட்ட மதிப்பீடுகள் அனுப்பப்பட்டுள்ளது. சாதனைகள் சிதம்பரம் நகரத்தில் முக்கிய இடங்களில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் ரூ 23 கோடியில் விரைந்து நடைபெற உள்ளது. இதுவெல்லாம் நாம் செய்த சாதனைகள்.  

Having bought the pot symbol, we have won half of it' Udhayanidhi Stalin's speech in Chidambaram

திருமாவளவனை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட்டை இழக்க செய்ய வேண்டும். இவரை சில அரசியல் புரோக்கர்கள் திமுக கூட்டணியில் இருக்க மாட்டார்கள் என கூறினார்கள் அவர் இது தான் கொள்கை கூட்டணி என உறுதியோடு இருந்தார். பாஜக கூட்டணி தான் கொள்ளை கூட்டணி.  நான் மிகப்பெரிய வெற்றியாக கருதுவது அண்ணன் திருமாவளவன் மற்றும் விழுப்புரத்தில் ரவிக்குமார் வெற்றியை தான்.  

மகளிர் தான் அரசு பேருந்துகளின் உரிமையாளர்கள் அவர்கள் எங்க நிறுத்தினாலும் நிறுத்தி ஏறி கொள்கிறார்கள் 3 வருடத்தில் 450 கோடி பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். ரோஸ் கலர் பேருந்துகளை அவர்கள் ஸ்டாலின் பேருந்து என கூறுகிறார்கள். கட்டணம் இல்லா பேருந்து அது உங்களின் உரிமை.பெண்கள் பள்ளிக்கு மட்டும் போகாமல் கல்லூரிக்கு போய் பட்டங்களை பெற வேண்டும். அதற்காக புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி மாதம் ரூ 1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமைச் திட்டம் மூலம் 1 கோடியே 16 லட்சம் மகளிர் உரிமைத்தொகை பெறுகிறார்கள். மீதி விண்ணப்பித்தவர்களுக்கும் வழங்கப்படும். அந்தத் துறைக்கும் நான்தான் அமைச்சர் உறுதி அளிக்கிறேன். ஆனால் நீங்க எனக்கு ஒரு வாக்குறுதி அளிக்க வேண்டும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள 5  ஓட்டுகளும் கண்டிப்பாக பானை சின்னத்திற்கு கிடைக்க நான் உறுதி ஏற்றுக் கொள்கிறேன் என உறுதி அளிக்க வேண்டும்.

நான் பிரச்சாரம் மேற்கொண்டது ஒரு ட்ரெய்லர் தான் ஆனால் வரும் 6 ஆம் தேதி  இங்கு தமிழக முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டு  பாசிச மோடி அரசு பற்றியும் கழக ஆட்சி என்னென்ன திட்டங்களை கொண்டுள்ளது என்பது பற்றி பேசுவார்'' என்றார்.