Skip to main content

திமுகவை அழித்து தேர்தலில் வெற்றிபெற தொகுதிக்கு 40 கோடி: வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ரமேஷ் போட்டியிடுகிறார்கள் இவர்களை கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் அறிமுகம் செய்து  வைத்து சால்வை அனிவித்து மரியாதை செலுத்தி ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி,திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.  அப்போது கூட்டத்தில் பேசிய சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திருமாவளவன் இந்தத் தேர்தல் மிக முக்கியமானது மத்தியில் மோடியை அகற்றவும்,  தமிழகத்தில் எடப்பாடியை விரட்டி மத்தியில் ராகுல் காந்தியை பிரதமராக்கவேண்டும்,  தமிழகத்தில் மு க ஸ்டாலினை முதல்வராக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும்.  

 

THIRUMAVALAVAN SPEECH

 

இங்கு கூடியுள்ள கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி அவர்கள் கூட்டியிருக்கும் கூட்டணி விலை கொடுத்து வாங்கிய வர்த்தகக் ரீதியான கூட்டணி . உலகம் முழுவதும் ஒலிக்கும் ஒரே குரல் மீண்டும் வேண்டாம் மோடி எனவே மோடியையும் எடப்பாடியையும் விரட்ட கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள்அதி தீவிரமாக செயல்பட வேண்டும். தேர்தலுக்கு நாட்கள் மிகவும் குறைவாக உள்ளது.  வரும் 25-ஆம் தேதி சிதம்பரம் தொகுதிக்கு அரியலூரிலும் கடலூர் தொகுதிக்கு  கடலூரிலும் மனு தாக்கல் செய்கிறார்கள். அதனை தொடர்ந்து 26-ந்தேதி தொகுதிகளில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது.  திமுகவை வீழ்த்த ஒரு தொகுதிக்கு 40 கோடி ரூபாய் செலவு செய்ய கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அதனைத் தாண்டி மக்கள் மோடி, எடப்பாடியை விரட்ட தயார் நிலையில் உள்ளனர் . மனிதன் நாகரிக வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது பானை., அந்தப் பானையே நமக்கு சின்னமாக கிடைத்தது இருப்பது  பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது  40 க்கு  40 தொகுதிகளை வென்றெடுக்க ஒவ்வொரு கூட்டணி கட்சியினரும்  தனித்தனியாக பறக்கும் படை அமைத்து பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவதை தடுக்க விழிப்புடன் செயல்பட வேண்டும் என பேசினார்.

 

THIRUMAVALAVAN SPEECH

 

திமுக முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில் கூட்டணியில் வேட்பாளரை அறிவித்து விட்டால் அந்த வேட்பாளரை சொந்தகட்சி வேட்பாளர் போல் வெற்றிக்கு பாடுபடுவோம். இந்த தேர்தலில் திருமாவை 1 லட்சம் வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற உறுதியேற்போம் என்றார்.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம் பேசுகையில், அனைவரும் சாதியத்தை மறந்து கொள்கையின் அடிப்படையில் செயல்படவேண்டும். மோடியின் ஆட்சியில் கடலூர் மாவட்டம் ஹெட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட விவசாயத்திற்கு எதிரான நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மோடியையும் எடப்பாடியையும் விரட்ட அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றவேண்டும் என்றார்.

 

 

கூட்டத்தில் திமுக சார்பில் இளைஞர் அணி செயலாளர் புகழேந்தி, புவனகிரி திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன். மதிமுக சார்பில் மாநில நிர்வாகி வந்தியதேவன், சிபிஎம் மாநிலக்குழு மூசா, மாதவன், சிபிஐ மாவட்ட மாநில நிர்வாகி மணிவாசகம், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில நிர்வாகி திருமாவளவன்,மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு தேர்தலில் வெற்றிபெறுவது குறித்து பேசினார்கள்.

 

பெட்டிசெய்தி

 

எம்ஆர்கே பன்னீர்செல்வம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பானை சின்னம் அறிவிக்கப்பட்டு சிறிது நேரத்திலே கடந்த 20 வருடத்திற்கு முன் சினிமாவில் படலாக வந்த பாடல் நமக்காக பாடியது போல் வாட்ஸ்அப் மூலம்  பட்டிதொட்டியெல்லாம் பரவிவிட்டது என பேசிக்கொண்டு இருந்த போதே திருமாவளவன் அவரது செல்போனில் இருந்த அந்த பாடலை ஆன் செய்து கையில் வைத்திருந்த மைக்கு அருகில் வைத்தார். அரங்கம் முழுவதும் அந்த பாடல் ஒலித்தது எங்கிருந்து பாடல் வருகிறது என்று அனைவரும் விழித்தனர். பின்னர் இவர் செய்ததை பார்த்து அரங்கத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” - தொல். திருமாவளவன் எம்.பி.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் நரேந்திர மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை  விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார். மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது.

‘காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை இஸ்லாமியர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது’ என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார். ‘உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?. பொதுமக்களிடம் உள்ள தங்கத்தையெல்லாம் கைப்பற்றி எல்லோருக்கும் கொடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இதே காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள்.

அப்படியென்றால் இப்போது பறிமுதல் செய்யும் சொத்துக்களை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு,  நீங்கள் உழைத்து சம்பாதித்த வளத்தையெல்லாம் ஊடுருவல் காரர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய தாய்மார்கள் சகோதரிகள் வைத்திருக்கும் தங்கத்தை எல்லாம் தேடி கணக்கெடுப்பு செய்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் சொத்துக்களில் முதல் உரிமை இருக்கிறது என்று மன்மோகன் சிங் சொன்னார். இது நகர்ப்புற நக்சலைட்டின் மனோபாவம். எனது தாய்மார்களே! சகோதரிகளே! காங்கிரஸ் கட்சி உங்களுடைய தாலியைக் கூட விட்டு வைக்காது’என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தேர்தலுக்கு பின் சென்னை திரும்பும் மக்கள்; திணறும் பரனூர்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
People returning to Chennai after elections; The stifling Paranur toll plaza

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏற்கனவே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு இலட்சக்கணக்கானோர் வாக்களிப்பதற்காக சென்றிருந்தனர். இதன் காரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மூன்று நாள் விடுமுறை முடிந்து சென்னைக்கு அதிகப்படியான மக்கள் திரும்புவதால் பல்வேறு இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அடுத்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.