Skip to main content

மறைமுக தேர்தல் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்- திருமாவளவன் பேட்டி

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கவுன்சிலர்கள் மூலம் மேயரை தேர்ந்தெடுக்க அவசரச்சட்டம் இயற்றிருப்பது தேர்தலுக்கு பிறகு கவுன்சிலர்களை கடத்திச்செல்வதற்கும், குதிரைப்பேரம் நடத்துவதற்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும். இந்த அவசர சட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். இந்திய அரசு மரபு என்ற பெயரில் கோத்தபய ராஜபக்சேவுக்கு வரவேற்பு கொடுப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது.

 

Thirumavalavan press meet


தமிழ் மக்களின் உணர்வுகளை அரசு மதிக்க வேண்டும். கோத்தபய ராஜபக்சே தனது வருகை குறித்து எண்ண வேண்டும். மதசார்பின்மையை காப்பாற்றுவது இந்திய அரசியலில் கடினமானது என்பதை இந்திய அரசியலில் மகாராஷ்டிரா ஆட்சியமைப்பதில் காட்டுகிறது. ஜனநாயகத்தின் மதசார்பின்மையின் நன்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. மேலவளவு மிக கொடூரமான நாட்டையே உலுக்கிய படுகொலை. மேலவளவு கொலைக்குற்றவாளிகளை விடுதலை செய்தது ஒட்டுமொத்த தலீத் மக்களுக்கு எதிரான நடவடிக்கை. இது தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும். அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 

மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப்போட்டிகளில் ஆதிதிராவிட அனைத்து சமுதாய மக்களும் பிரதிநிதியாய் உள்ளதுபோல ஆதிதிராவிட தலித் மக்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும். மகாராஷ்டிராவில் நடைபெற்றுள்ள நிகழ்வு ஒரு ஆபத்தான அறிகுறி. மதவாத சக்திகளால் மதசார்பின்மையை கட்டுப்படுத்த முடியும் என்பதையே காட்டுகிறது. அதிமுக- விடுதலை சிறுத்தை கட்சி கூட்டணி ஏற்பட வாய்ப்புண்டா என்ற கேள்விக்கு, காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால் பரப்பபடுகிற வதந்தி.

முதலமைச்சரை அதிக முறை சந்தித்து பேசியுள்ளேன். முதல்முறை சந்திக்க வில்லை. மேலவளவு படுகொலை, உள்ளாட்சித்தேர்தலில் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியே முதல்வரை சந்தித்தேன். தமிழக பாலில் நச்சுத்தன்மை அதிகம் உள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது.மத்திய அரசே அதற்கே சான்றிதழ் அளித்துள்ளது. இது மேலும் அதிர்ச்சியளிக்கிறது.

பஞ்சமி நில விவகாரத்தில் பாஜக குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, எவ்வளவோ இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர், குடிசைகள் கொளுத்தப்பட்டுள்ளன. அப்போது எந்தக்கேள்வியும் கேட்காத பாஜகவினர் அரசியல் லாபத்திற்காக பேசுகின்றனர். அரசியல் லாபத்திற்காக இது போன்ற குற்றச்சட்டுக்களை முன்வைக்கின்றனர். மக்களிடம் அவர்கள் அம்பலப்பட்டு நிற்பார்கள் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.