Advertisment

கேரள முதல்வரிடம் 15 லட்சம் நிதிக்கான காசோலை வழங்கினார் திருமாவளவன்

டி

கேரள முதல்வர் மாண்புமிகு பினராயி விஜயனை நேரில் சந்தித்து நேற்று (31.8.18) காலை 10 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கட்சியின் சார்பில் ரூபாய் பதினைந்து லட்சத்திற்கான (ரூ.15,00,000) காசோலையை பேரிடர் மீட்பு நிதியாக வழங்கினார். ஏற்கனவே ரூபாய் பத்து லட்சத்துக்கு மட்டும் காசோலை வழங்குவது என அறிவித்திருந்த நிலையில் தற்போது ரூபாய் பதினைந்து லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், உணவு பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களும் விரைவில் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, இடுக்கி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நிவாரண பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Advertisment

Thirumavalavan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe