Skip to main content

வாலிபர் கொலை!!! மனைவியிடம் விசாரணை... மைத்துனர் தலைமறைவு... 

Published on 05/06/2020 | Edited on 05/06/2020
thirukovilur



புதுவையை அடுத்த திருக்கோவிலூரை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகன் ராஜேஷ்குமார் (வயது 22). தனியார் வங்கி ஊழியர். இவர் திருபுவனையை சேர்ந்த காயத்ரி(வயது 21) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே, இரு வீட்டார் சம்மதத்துடன் 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தம்பதியினர் முதலியார்பேட்டை திரு.வி.க நகரில் குடியிருந்து வருகின்றனர். காதல் திருமணம் செய்திருந்தாலும் திருமணம் ஆன சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.


காயத்ரி இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்து வந்துள்ளார். நேற்று மாலை காயத்ரியின் சகோதரர் அமல்ராஜ் (எ) செல்வராஜ் ராஜேஷ்குமாருக்கு போன் செய்து வீட்டிற்கு வந்து செல்லுமாறு கூறியுள்ளார். ராஜேஷ்குமார் தனது மனைவியிடம் கூறிவிட்டு தனது மைத்துனரை பார்க்க சென்றுள்ளார். இருவரும் திருபுவனைபாளையத்தில் உள்ள சவுக்குத்தோப்பில் நேற்றிரவு மது அருந்த சென்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை சவுக்கு தோப்பு வழியாக வந்த சிலர் அங்கு வாலிபர் ஒருவரின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் திருபுவனை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருபுவனை உதவி ஆய்வாளர் அஜித் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ராஜேஷ்குமார் கழுத்தில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவருக்கு அருகில் மதுபான பாட்டில்களும், கத்தியும் கிடந்துள்ளது. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

 


சம்பவ இடத்திற்கு மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கிருந்த ராஜேஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதனையடுத்து ராஜேஷ்குமாருடன் மது அருந்திய அவரது மைத்துனர் அமல்ராஜ் இந்த கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அமல்ராஜின் செல்போனுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது அதில் அழைப்பு சென்றுக்கொண்டே இருந்தது. ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் குடிபோதையில் குடும்ப தகராறு குறித்து இருவரும் பேசியிருக்கலாம் என்றும் அப்போது ஏற்பட்ட வாய்தகராறில் கொலை செய்துவிட்டு அமல்ராஜ் தப்பியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.