thirukovilur girl children die of suffocation in a locked car

இரு சிறுமிகள் காருக்குள் ஏறி விளையாடியபோது கதவுகள் லாக் ஆனதால் வெளியே வர முடியாமல்மூச்சுத் திணறி இறந்து போன சம்பவம் திருக்கோவிலூர் மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளகுலதீபமங்கலத்தில் உள்ள பாரதியார் தெருவைச் சேர்ந்தஏழுமலையின் மகள் ராஜேஸ்வரி (7). இவர் அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஐயனாரின்மகள் வனிதாவும் (3) நேற்று மதியம் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்தத் தெருவின் ஓரத்தில் பழுதான கார் ஒன்று பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சிறுமிகள் இருவரும் அந்த காரின் கதவைத் திறந்து உள்ளே சென்று பின்னர் காரின் கதவை மூடுவதும் திறப்பதும் ஆக விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் உள்ளே இருந்த நிலையில் காரின் கதவு திடீரென லாக் ஆகிவிட்டது. இதனால் காரின் உள்ளே சிக்கிக் கொண்ட சிறுமிகளுக்கு காரின் கதவைத் திறக்க முடியவில்லை. காரின் அனைத்துக் கண்ணாடிகளும் உள்ளே புக முடியாத அளவுக்கு ஏற்கனவே மூடப்பட்டதனால் இரண்டு சிறுமிகளும் உள்ளே இருந்து பயந்து கதறி உள்ளனர். கார் கண்ணாடி உட்பட மூடப்பட்டு இருந்ததால் சிறுமிகளின் சத்தம் வெளியே யாருக்கும் கேட்கவில்லை நேரம் செல்லச் செல்ல இரண்டு சிறுமிகளும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து விட்டனர்.

Advertisment

இதற்கிடையே மாலை வெகுநேரமாகியும் சிறுமிகள் வீட்டிற்கு வராததால் அவர்களது பெற்றோர்கள் ஊரைச்சுற்றி தேடினர். அப்போது அந்தத் தெருவைச் சேர்ந்த ஒருவர் இரண்டு சிறுமிகளும் காரின் அருகில் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தாகத் தெரிவித்துள்ளார் உடனே அவர்கள் அந்தக் காரின் அருகில் சென்று கார் கண்ணாடி வழியே பார்த்தபோது இரண்டு சிறுமிகளும் காருக்குள் மயங்கிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் காரின் கதவை உடைத்து உள்ளே இருந்த இரண்டு சிறுமிகளையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிகள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இரு குழந்தைகளின் பெற்றோர்களும் துடித்துக் கதறி அழுதனர் இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் காவல் துறை டி.எஸ்.பி. மகேஷ் மணலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் செல்வம், சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.மேலும் இதுதொடர்பாக மணலூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு சிறுமிகள் காருக்குள் விளையாடியபோதுமூச்சுத் திணறி இறந்து போன சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.