thiruchy lady police incident

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச்சேர்ந்த கௌசல்யா, திருச்சி மாநகர ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் கே.கே.நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் தன்னுடன் பணியாற்றும் சக போலீஸ் காவலர் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்த நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை.இதனைத் தொடர்ந்து அந்த காவலர் தனது முறைப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த கௌசல்யா எலி பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றார். மயங்கி விழுந்த அவரை அவரது சக காவலர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்த்தனர். ஆயினும் சிகிச்சைப் பலனின்றி கௌசல்யா இறந்துவிட்டார். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment