Skip to main content

திருச்சியில் கந்து வட்டி தொல்லையால் ஒருவர் தற்கொலை!

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

கந்து வட்டி கொடுமையில் தற்கொலை மரணம் என்பது தற்போது வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்று காலை லால்குடியில் கந்து வட்டி கொடுமையால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. 

thiruchy incident... police investigation


திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுமருதூரை சேர்ந்தவர் எட்வர்டு . இவர் கூலி விவசாயி. இவருக்கு ஸ்டெல்லா, சாலினி, சந்திரா இந்த மூன்று மகள்களும் சாமுவேல் என்கிற மாற்றுத்திறனாளி இருக்கிறார். அவருக்கு 17 வயதாகிறது. இந்த குழந்தைகளின் படிப்பு செலவுக்காகவும், மகனின் மருத்துவ செலவிற்காகவும் தாளக்குடியில் உள்ள சூரி என்பவரிடம் வீடு பத்திரத்தை அடமானமாக வைத்து 30 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கி இருக்கிறார். வட்டி அதிக வட்டியாக இருந்தாலும் தொடர்ந்து கட்டிக்கொண்டே வந்தவர்  தீடீரென அவருடைய மகன் சாமுவேல் கடந்த 3 மாதமாக உடல்நிலை சரியில்லாமல் திருச்சி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் அவரால் வட்டி செலுத்த முடியவில்லை. இந்தநிலையில் சூரியும் அவருடைய மருமகனும் எட்வர்டிடம் வட்டி பணம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார்.

thiruchy incident... police investigation


இது குறித்து கடந்த சிலநாட்களாக எட்வர்டு தன்னுடைய அண்ணகளிடம் வட்டி கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அவர்கள் போலிசில் புகார் கொடுக்க சொல்லி அறிவுறுத்திருக்கிறார்கள். இந்தநிலையில் எட்வர்டு வீட்டின் பின்புறத்தில் உள்ள புளிமரத்தில் தூக்கபோட்டு இறந்துள்ளார். இது குறித்து சமயபுரம் போலிசாருக்கு எட்வர்டு குடும்பத்தினர் புகார் கொடுக்க, உடனே சமயபுரம் போலிசார் எட்வர்டு உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கு காரணம் என்ன என்று விசாரணையில் இறங்கியுள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.