Skip to main content

பூங்கா திறப்பதைவிட முதல்ல ரோட்டை போடுங்க... அமைச்சரை மறித்த பெண்கள்!

Published on 09/09/2019 | Edited on 09/09/2019

ஸ்மார்ட் சிட்டி என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து திருச்சி மாநகராட்சியின் சார்பில் ரோடு போடுவதை விட பூங்கா திறப்பதிலே திருச்சி அமைச்சர்களும், மாநகராட்சி ஆணையரும் முனைப்பாக இருக்கிறார்கள். இதனால் கொதிப்படைந்த பெண்கள் அமைச்சரை முற்றுகையிட்டு ரோடு போட சொல்லி வலியுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் வேலுமணி திருச்சி வந்திருந்தார். உள்ளாட்சிதுறை அமைச்சர் வருவதால் நேற்றை தினம் பல இடங்களில் அவசர அவசரமாக ரோடுகள் பேட்ச் ஒர்க் பார்க்கப்பட்டது.

 

in thiruchy; first Put the road and then open park...women protest in front of minister


திருச்சி காஜாமலை பெரியார் நகரில், 73 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பூங்காவை அமைச்சர் வேலுமணி திறந்து வைப்பார் என்பதால் அவ்வழியில் புதியதாக சாலைகள் போடப்பட்டன. அமைச்சர் செல்லும் பாதையில் உள்ள அலிகான் குளத்தெருவில், பாதியளவு மட்டுமே கான்கீரிட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மீதியுள்ள காந்திநகர் பகுதியில் ரோடு போடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை அமைச்சர் வேலுமணி தனிக்காரிலும், திருச்சி கலெக்டர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன் ஆகியோர் தனித்தனியே சென்றனர். இதில் கலெக்டர் சிவராசு, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் ஆகியோரும் முற்றுகையில் சிக்கினர்.

அப்பொது கலெக்டர் சிவராசு முற்றுகையிட்ட பெண்களிடம் யம்மா நான் தாம்மா கலெக்டர் நா இந்த ரோட்டை உடனே போட சொல்றேன் என்று சொல்லி பெண்களை சமாதப்படுத்த முயன்று கொண்டிருக்கும்போது பின்னால் அமைச்சர் வேலுமணியின் காரை பார்த்தவுடன் அவரை நோக்கி முற்றுகையிட பெண்கள் சென்று பூங்கா திறக்குறதைவிட ரோட்டை போடுங்கள் அமைச்சரே என்று பெண்கள் கோரசா சொல்ல.. முற்றுகையால் காரில் இருந்து இறங்கிய அமைச்சர் வேலுமணி விரைவில் சாலை அமைத்து தரப்படும் என்று உறுதியளித்தின் பேரில் கலைந்து சென்றனர்.

அமைச்சர் வேலுமணி காரில் இருந்து இறங்கி சென்றபோது அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் காரிலேயே அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.