Skip to main content

திருச்சியில் ஆவினில் 5 பேர் திடீர் பணியிடமாற்றம்! ஏன் ?

Published on 20/05/2020 | Edited on 20/05/2020
thiruchy avin

 

கரோனா ஊரடங்கில் அனைவரும் வீட்டிலே முடங்கி கிடக்கிறார்கள் அரசு நிறுவனங்கள் மட்டும் குறிப்பிட சிலரை மட்டும் பணிக்கு அழைத்திருக்கிறார்கள். அதன்படி ஆவின் நிறுவனங்கள் முழுவீச்சோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் திருச்சி ஆவின் நிறுவனத்தில்  சிலரை வெளியே தெரியாமல் பணியிட மாற்றம் செய்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் பணி இடமாற்றமா? என்கிற கேள்வி வர, என்ன வென்று விசாரிக்கையில்,


கிளினிங் ஆப்ரெட்டர் ஒரு பெண் – திருச்சியில் இருந்து மணப்பாறைக்கு மாற்றம், மணப்பாறையில் இருந்து திருச்சிக்கு அசிஸ்சென்ட் மாற்றம்,  லேப்பில் வேலை செய்யும் ஒருவர் மணப்பாறையில் இருந்து திருச்சிக்கு மாற்றம், மணப்பாறையில் ஆப்ரேட்டர் ஒருவர் ஆவினில் பால் குறைவாக வந்தால் கண்டுபிடிக்கும் பிரிவில் மிகச்சிறப்பாக வேலை செய்பவரை திருச்சிக்கு மாற்றம் செய்கிறார்கள். திருச்சியில் ஆவினில் இருந்து  பழைய பால்பண்ணைக்கு ஒருவரை மாற்றியிருக்கிறார்கள்.

மணப்பாறையில் வேலை செய்ய ஆள் இல்லை என்பதற்காக திருச்சியில் இருந்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிலரை நியமித்தார்கள். அவர்களில் சிலரை மீண்டும் தற்போது திருச்சிக்கு மாற்றி இருக்கிறார்கள். இந்த ரகசிய பணி இடமாற்றம் பின்புத்தில் ஆளும்கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் ஆவின் முக்கிய புள்ளியின் டிரைவர், புரோக்கர்களாக செயல்படும் ஆவின் முக்கியபுள்ளியின்  தம்பி மூலம் பணம்  கைமாறியதில் இந்த பணியிடமாற்றம் என்கிறார்கள். ஊரே கரோனாவில் தவிக்குது... ஆவினில் பணி ஓய்வு பெற்றவர்கள் பணி ஓய்வு பணத்திற்கு லஞ்சம் கேட்டு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் திருச்சி ஆவினில் சத்தம் இல்லாம் பணி இடமாற்றம் என்கிற பெயரில் பண மாற்றம் ஆகுது சார் என்று புலம்புகிறார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.