Skip to main content

தெய்வமே நம்மவரின் சீடனென்றால் உங்க சாமியும் டாடியும் எம்மாத்திரம்! -மக்கள் நீதி மய்யத்தின் போஸ்டர் டெக்னிக்!

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

பிப்ரவரி 21, மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நாள். தற்போது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அந்தக் கட்சியை வாழ்த்தி மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.  ‘தமிழகத்தின் புதிய பாரதியே!’ என்று ட்விட்டரில் அவ்வப்போது கவிதை எழுதும் கமல்ஹாசனை மகாகவி ரேஞ்சுக்கு போற்றுவதெல்லாம் சரிதான்!  ‘2021-ல் மக்கள் நீதி மய்யம் அரசமைக்கும்’ என நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பதும் சரிதான்!  ஆனால், சில போஸ்டர்களில்  கட்சியை வாழ்த்துவதைக் காட்டிலும், யாரையோ திட்டுவதற்கு முக்கியத்துவம் தந்துள்ளனர்.

 

third year of makkal needhi maiam... posters in madurai

 

வாழ்த்தோடு வசவும் சேர்ந்துள்ள அந்த போஸ்டர்களில்,  ‘3 அமாவாசையில் காணாமல் போகும் கட்சி என்று கூறிய மூடனே! நீ வணங்கும் தெய்வமும் நம்மவரின் சீடனே!’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இன்னொரு போஸ்டரில் ‘மூடர் கூடமே’ என்று பலரைத் திட்டியுள்ளனர். ‘உங்க சாமியும் டாடியும் நம்மவரிடம் கற்க வேண்டும் அரசியல் பாடமே!’ என்று, குறிப்பிட்ட இருவரை விமர்சித்துள்ளனர்.

‘3 அமாவாசையில் கட்சி காணாமல் போகும்’ என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி என்றோ பேசியதற்கு, அப்போதே கமல்ஹாசன் ’அமாவாசை பற்றி பேசியவர்கள் நிஜ சந்திரனைப் பார்த்திருக்க மாட்டார்கள்..’ என்று பதிலடி தந்தார். ஸ்ரீபிரியாவும் கூட, ‘எங்களுக்கு நாள் குறிக்க நீங்கள் யார்?’ என்று கேள்வி கேட்டார். அதெல்லாம் முடிந்துபோன விஷயம் என்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளால் விட்டுவிட முடியவில்லை. அதனால்தான், கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க நாள் வாழ்த்து போஸ்டர்களில், அடிமனதில் தேக்கி வைத்திருந்த ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டனர்.

 

third year of makkal needhi maiam... posters in madurai

 

‘சில வாசங்கள் புரியவில்லையே..’ என்று அக்கட்சியின் நிர்வாகி ஒருவரிடம்  கேட்டபோது,  “உங்க சாமியும் டாடியும் நம்மவரிடம் கற்க வேண்டும் அரசியல் பாடமே! என்பது,  எடப்பாடி பழனிசாமியையும், நரேந்திரமோடியையும் குறிக்கிறது.” என்றார்.  
‘நீ வணங்கும் தெய்வமும் நம்மவரின் சீடனே! என்பதற்கு அர்த்தம் கேட்டோம்.  “அதுவந்து.. அதுவந்து..” என்று தயங்கிவிட்டு,  “எங்க தலைவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அந்த அமைச்சரோ தெய்வங்களை வணங்குவதற்கு கோவில் கோவிலாகச் சுற்றி வருபவர். அரசியவாதி ஆயிற்றே! அவரைத் திட்டினால் வலிக்குமா? வலிக்காதா? என்று தெரியவில்லை. அதனால்தான், தசாவதாரம் எடுத்த தலைவரின் சீடனாக தெய்வத்தை ஆக்கிவிட்டோம்.’ என்று சிரித்தார்.

 

third year of makkal needhi maiam... posters in madurai

 

‘இந்த போஸ்டர்களின் பின்னணியில் இன்னொரு அரசியல் ஒளிந்திருக்கிறது..” என்றார், சிம்பு ரசிகர் ஒருவர்.     “கமலையும் மக்கள் நீதி மய்யத்தையும் ராஜேந்திரபாலாஜி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதே நேரத்தில், கமல் ரசிகர்களையும் விஜய் ரசிகர்களையும் வெறுப்பேற்றும் விதத்தில் ரஜினியையும் அஜித்தையும் புகழ்கிறார். அந்தக் கடுப்பில்தான், போஸ்டர்களில் ராஜேந்திரபாலாஜியை மட்டுமல்ல, அவர் வணங்கும் தெய்வத்தையும் அக்கட்சியினர் விட்டு வைக்கவில்லை.” என்றார்.

‘உள் விவகாரம்’ தெரியாத மதுரைவாசிகள் பலரையும் மக்கள் நீதி மய்யத்தின் போஸ்டர்கள் மண்டை காய வைக்கின்றன. மக்களைக் குழப்புவதும் ஒருவித அரசியல் போலும்!
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.