Skip to main content

தலைவர், துணை தலைவர் பதவிக்கு மூன்றாவது முறையாக மறைமுக தேர்தல்!

Published on 28/02/2020 | Edited on 28/02/2020

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் பெரும்பாலான இடங்களில் நடைபெற்றது. இத்தேர்தல் சில இடங்களில் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் பல ஊர்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக ஊரக உள்ளாட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச் 4ஆம் தேதி அந்த தேர்தல் நடைபெற உள்ளது.

 

Third time indirect local body elections in Erode

 



ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி இரண்டாவது முறையாக நடந்த மறைமுக தேர்தலில் ஈரோடு மற்றும் தூக்கநாயக்கன்பாளையம் யூனியன் தலைவர் , துணைத் தலைவர் பதவிக்கும் சென்னிமலை யூனியன் கொடுமணல், புஞ்சை பாலத் தொழுவு பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிக்கும் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து  ஜனவரி 30-ஆம் தேதி இரண்டாவது முறையாக நடந்த தேர்தலில் கொடுமணல் புஞ்சை பாலத் தொழுவுபஞ்சாயத்து துணை தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் ஈரோடு யூனியனில் அதிமுக -  திமுகவில் தலா மூன்று பேர் சமநிலையில் இருக்கும் நிலையில் நடந்த தேர்தலில் ஏற்கனவே கடத்தப்பட்ட அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேரும் வராத காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் தூக்கநாயக்கன்பாளையம் யூனியனில் நடந்த தேர்தலில் திமுக 6 இடம், காங்கிரஸ் ஒரு இடம், அதிமுக மூன்று இடம் என வெற்றி பெற்று கவுன்சிலர்கள் உள்ள நிலையில் திமுக கவுன்சிலர்கள் வாக்களிக்க வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மார்ச் 4 ஆம் தேதி மூன்றாம் முறையாக  ஈரோடு மற்றும் டி.என்.பாளையம் தலைவர், துணைத் தலைவர் தேர்தலுக்கான  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்று காலை 10.30  மணிக்கு அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அன்று  மதியம் 3 மணியளவில் துணைத் தலைவர் பதவிக்கான  தேர்தல் நடைபெற உள்ளது.  தலைவர், துணைத் தலைவர் பதவியைப் பிடிக்க அதிமுக - திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதேபோல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பல ஊர்களில் திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையே பெரும் போட்டி நிலவுகிறது இந்நிலையில் மூன்றாவது முறையாகவும்  தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், நான்காவது தேர்தலில் அப்போது வருகிற உறுப்பினர்களை கொண்டு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.