Advertisment

தமிழகத்தில் மூன்றாம் நாளாக ஆயிரத்தை கடந்த கரோனா!!! உயிரிழப்பு 200-ஐ நெருங்கியது...

 The third day in Tamil Nadu Corona

Advertisment

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091பேருக்குகரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரயில், பேருந்து,சொந்த வாகனங்கள் மூலம் வந்த1,036பேருக்குகரோனாபாதிப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் மூன்றாவது நாளாககரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,586 உள்ளது. தற்போது தமிழகத்தில் 10,680 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று உறுதி செய்யப்பட்டவர்களில் சென்னையில் மட்டும்809 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அதிகபட்சமாக சென்னையில் கரோனாவால்இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இதுவரை மொத்தமாக 16,585 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று உறுதி செய்யப்பட்ட 809 பேரில் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூன்று பேர்.அதேபோல் இன்று ஒரே நாளில் 13 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மூன்றாவது நாளாகஉயிரிழப்புஇரட்டை இலக்கத்தில்தொடர்ந்துள்ளது.அதேபோல் தமிழகத்தில் 13,706 பேர் இதுவரை குணமடைந்து வீட்டிற்குசென்றுள்ளனர். இன்று மட்டும் 536 பேர் சிகிச்சையிலிருந்து நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

Chennai Tamilnadu corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe