Skip to main content

“ஜெயலலிதாவின் நல்லாட்சி, எடப்பாடி தலைமையில் அமையப் பாடுபட வேண்டும்” - அதிமுக கூட்டத்தில் தீர்மானம்

Published on 11/11/2022 | Edited on 11/11/2022

 

thirchy admk meeting

 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம்களில் கட்சி நிர்வாகிகள் பணியாற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், அதிமுக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திராகாந்தி, பரமேஸ்வரி முருகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட அதிமுக பொருளாளர் சேவியர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

இந்தக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் திருத்தம் நீக்குதல் உள்ளிட்ட சிறப்பு முகாம்களில் அதிமுகவினர் சிறப்பாகச் செயல்பட வேண்டும். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்ற அடிப்படையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவரங்கம், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முனைப்புடன் செய்ய வேண்டும். 51 ஆம் ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி நாம் அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் ஜெயலலிதாவின் நல்லாட்சி எடப்பாடி தலைமையில் அமையப் பாடுபடவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 

சார்ந்த செய்திகள்