Skip to main content

மர்மமாகச் சுற்றித்திரிந்த மும்பை வாலிபர்: வளைத்துப் பிடித்து கரோனா தனிப்பிரிவுக்கு அனுப்பிவைத்த மக்கள்!

Published on 13/04/2020 | Edited on 13/04/2020


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஜக்கம்மா பேட்டை பகுதியில் நேற்று ஒரு இளைஞர் கையில் ஒரு பையுடன் மர்மமான முறையில் சுற்றித்திரிந்து உள்ளார்.  அவரைப் பார்த்த பொதுமக்கள் மிரண்டு போயுள்ளனர். அவரை விசாரித்தபோது,  அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார்.  உடனடியாக ரோஷனை காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

m


 

இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து அந்த இளைஞரைக் கொண்டுபோய் தீர விசாரித்தனர். அவரது பையில் அவர் உடுத்தும் துணிகள் மற்றும் கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு பகுதிகளில் ரயிலில் சென்ற டிக்கெட் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான ரசீது வைத்திருந்துள்ளார். அவர் மும்பையைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்துள்ளார்.  எனவே காவல்துறையினர் 108 ஆம்புலன்சை வரவழைத்து அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அவர் இப்போது கரோனா தனிப்பிரிவு சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலிருந்து ஒரு கரோனா நோயாளி மருத்துவக் குழுவினரின் தவறினால் வெளியே அனுப்பப்பட்டு இன்றுவரை தலைமறைவாகியுள்ளார். அவரைக் கண்டுபிடிக்க 7 தனிப்படை போலீசார் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர். இந்தநிலையில் இந்த மும்பை வாலிபரும் மர்மமான முறையில் சுற்றி வந்ததால் இவரால் கரோனா நோய் பரவி விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் மக்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

போர்வெல் சுவிட்சை இயக்கிய போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
A boy lose their live due to electric shock while turning on the borewell switch

திண்டிவனத்தில் போர்வெல் மோட்டார் சுவிட்சை இயக்கிய 10 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டிவனத்தில் கிராமம் ஒன்றில் அரசு சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்ற தேவேந்திரன் என்ற 10 வயது சிறுவன் அங்குள்ள மோட்டாரின் சுவிட்ச்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது சிறுவன் தேவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனைப் பார்த்த அவருடைய தந்தை மகனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது.

இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  ஆனால் சிறுவன் தேவேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சிறுவனின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கதறி அழுத காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியது. போர்வெல் சுவிட்ச் ஷாக் அடிப்பதால் மரக் குச்சியை வைத்து பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், பலமுறை இதை மாற்றக் கோரியும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தற்போது இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

Next Story

காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு; மதங்களை கடந்து கரம் பிடித்த காதலர்கள்

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

lovers incident in tindivanam women police station 

 

செங்கல்பட்டு பெரிய நத்தம் நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகள் திவ்யாவும் (வயது 21), விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரது மகன் அசேன் என்பவரும் சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளனர்.இதன் மூலம் இருவரும் அறிமுகமாகி அவர்களின் நட்பு பின்பு  காதலாக மாறி கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

 

இவர்களின் காதல் பெற்றோர்களுக்கு தெரிய வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த 5 ஆம் தேதி திவ்யா அவரது வீட்டில் இருந்து வெளியேறி திண்டிவனத்தில் உள்ள காதலன் அசேன் உடன் வந்துவிட்டார். இதனை தொடர்ந்து இருவரும் சென்னை கோவளம் பகுதியில் உள்ள ஒரு தர்காவில் திவ்யாவை இஸ்லாமியராக மதமாற்றம் செய்து கொண்டனர். அதன் பிறகு இஸ்லாம் மத முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

 

இதனையடுத்து நேற்று தம்பதிகள் இருவரும் திண்டிவனம் அனைத்து காவல் நிலையத்திற்கு சென்று தங்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தங்களுக்கு பாதுகாப்பு  கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். அதனை தொடர்ந்து இவர்கள் இருவரையும் போலீசார் காதலன் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.