Skip to main content

உண்டியலை உடைக்க முடியாததால் அலேக்காக தூக்கி சென்ற புள்ளிங்கோ திருடர்கள்

Published on 16/07/2023 | Edited on 16/07/2023

 

Thieves who took the money for Ale because they couldn't break it

                                                 கோப்புப்படம் 
 

வேலூர் அடுத்த சித்தேரி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மகா சக்தி மாரியம்மன் திருக்கோவில். இக்கோவிலுக்கு இன்று காலை பூஜை செய்வதற்காக பூசாரி வந்தபோது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது கோவிலின் உண்டியல் காணாமல் போயுள்ளது தெரிய வந்தது. இதனை அடுத்து பூசாரி கோவில் தர்மகர்த்தா ரவிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் இதுகுறித்து அரியூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் திருடு போன உண்டியல் கோவிலில் இருந்து சற்று தொலைவில் உள்ள சித்தேரி ரயில்வே தண்டவாளம் அருகே கிடப்பது கண்டறியப்பட்டது.

 

தொடர்ந்து கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, இன்று அதிகாலை முகத்தை மறைத்தபடி அரைக்கால் சட்டையுடன் உள்ளே நுழைந்த இரண்டு (புள்ளிங்கோ திருடர்கள்) இளைஞர்கள். கோவிலுக்கு உள்ளே உள்ள சில்வராள் செய்யப்பட்ட கோவில் உண்டியலை இரும்பு ராடு கொண்டு உடைக்க முயற்சித்துள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் உண்டியலை உடைக்க முடியாமல் திணறி பதற்றத்துக்குள்ளான இரண்டு திருடர்கள் பட்ட கஷ்டம் வீணாகி விடக்கூடாது என்பதற்காக கன நொடியில் யோசித்து உண்டியலை அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு தப்பி ஓடி உள்ளனர். திருடர்கள் உண்டியலை திருட திக்குத் திணறிய காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

 

மேலும் இக்கோவிலில் கடந்த மாதம் (01.06.2023) ஒன்றாம் தேதி கும்பாபிஷேகமும், கடந்த சில நாட்களாக மண்டல பூஜையும் நடைபெற்றுள்ளதாகவும். அதேசமயம் கடந்த ஆறு மாதங்களாக உண்டியல் பணம் வெளியே எடுக்காத சூழலில் சுமார் 50,000 ரூபாய் வரை திருடு போயிருக்கலாம் என கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

 

இதையடுத்து கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையிலும், கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சியை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்த அரியூர் காவல்துறையினர் தப்பிச்சென்ற திருடர்களை தேடி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.