Skip to main content

திருச்சியில் தொடரும் வழிப்பறி; குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

Published on 21/09/2022 | Edited on 21/09/2022

 

Thievery continues in Trichy; The police arrested the accused

 

திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியிலான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க மாநகர காவல்துறையினருக்கு தொடர்ந்து உத்தரவிட்டு வருகிறார்.

 

கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி திருச்சி கீழ ஆண்டாள் வீதியில் நடந்து சென்ற நபரிடம் ஒருவர் கத்தியை காண்பித்து ரூ.2300 கொள்ளை அடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை செய்தனர். இதில் அய்யப்பன் என்பவர் கைது செய்யப்பட்டார். 

 

மேலும் காவல்துறையினர் விசாரணையில் கைது செய்யப்பட்ட அய்யப்பன் மீது திருச்சி  காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் மற்றும் மலைக்கோட்டை பகுதிகளில் இருசக்கர வாகனத்தை திருடியதாக 3 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் இருசக்கர வாகனம்  திருடியதாக 2 வழக்குகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் செல்போன் கடை உடைத்து செல்போன்களை திருடியதாக 2 வழக்குகளும், பொதுமக்களிடம் கத்தியை காண்பித்து பணம் பறித்ததாக 2 வழக்குகள் என மொத்தம் 9 வழக்குகள் நிலுவையில் இருந்ததை கண்டறிந்தனர்.

 

இதன்மூலம் அய்யப்பன் தொடர்ந்து  குற்றச்செயல்களில் ஈடுபடும் குணம் கொண்டவர் என விசாரணையில் தெரிய வந்தது. அவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை  குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து காவல் ஆணையர் G.கார்த்திகேயன் அய்யப்பனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

 

அதனை  தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள அய்யப்பன் மீது குண்டர் தடுப்பு சட்ட  ஆணை சார்பு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சியில் இதுபோன்ற வழிப்பறி குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையரால்  கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.