Advertisment

 கொள்ளையன் நாதுராம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

nathuram

கொள்ளையன் நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகள் பக்தாராம், தினேஷ் சவுத்ரி ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Advertisment

சென்னை கொளத்தூரில் உள்ள நகை கடையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி ஆகியவற்றை கொள்ளையடித்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாதுராம் (28), தினேஷ் சவுத்ரி (20) மற்றும் பக்தாராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான மூன்று கொள்ளையர்களும் ராஜஸ்தானில் இருந்து கடந்த 26ம் தேதி சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் 3 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisment

இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின்பேரில், கொள்ளையர்கள் நாதுராம் மற்றும் பத்தாராம் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

nadagram pirate fell law
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe