Skip to main content

‘பாஸ்டேக்’ குறுஞ்செய்தியால் உஷாரான உரிமையாளர்... விடாப்பிடியாக விரட்டி பிடித்த காவலர்கள்!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021

 

The thief who escaped with the jewelery and money

 

தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் தெற்கு லட்சுமி நகரைச் சேர்ந்தவர் கருப்பையா(62). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டைப் பூட்டி விட்டு வெளியில் சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன் 50ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளைத் திருடியுள்ளார். அதன் பின்னர் வாசலில் நின்றுகொண்டிருந்த கருப்பையாவின் காரை பயன்படுத்தித் தப்பிச் சென்றுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் மறுநாள் காலை கருப்பையாவுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கருப்பையா பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் காவல் ஆய்வாளர் தேவசகாயமேரி தலைமையிலான காவலர்கள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கருப்பையாவின் செல்போனுக்கு பாஸ் டேக் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.

 

அதில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கருப்பையாவின் கார் கடந்து இருப்பதாக பாஸ்டேக் விவரங்களுடன் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக் கண்டு உஷாரான கருப்பையா உடனடியாக பீர்க்கன்கரணை காவலர்களுக்குத் தகவல் அளித்தார். விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் கருப்பையாவின் கார் பதிவெண்ணை விக்கிரவாண்டியை அடுத்துள்ள சுங்கச் சாவடிகளுக்குத் தெரிவித்துள்ளனர். விக்கிரவாண்டி டோல்கேட்டை தாண்டியதும் கொள்ளையன் உஷாராகி பாஸ்டேக் ஸ்டிக்கரை கிழித்து எறிந்துள்ளான். கார் பதிவெண்ணை வைத்துப் பிடிக்க முயன்ற காவலர்கள் அதற்காக ஆங்காங்கே தடுப்புகள் அமைத்துச் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் கொள்ளையன் தடுப்புகளை மோதி தப்பிச் சென்றுள்ளார்.  அதன்பின்பு சமயபுரத்தில் உள்ள ஒரு சுங்கச்சாவடி அருகில் கொள்ளையனின் காரை மடக்கிப் பிடிப்பதற்காகச் சாலையில் வாகனங்களை நிறுத்தி காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

 

காவலர்களைக் கண்டதும் காரை நிறுத்துவிட்டுத் தப்பி கொள்ளையன் சென்றுள்ளார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத காவல்துறையினர் கொள்ளையனை சுமார் 2கிலோமீட்டர் தூரம் வரைக்குச் சென்று மடக்கிப் பிடித்தனர். இதனையடுத்து பீர்க்கன்கரணை காவலர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து கொள்ளையனைப் பிடித்துச் சென்று சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் திருட்டில் ஈடுபட்டது 19வயது மதிக்கத்தக்க வினோத்குமார் என்பதும் அவர் சென்னை படப்பை கரசங்காய் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. வினோத்குமாரைக் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 15ஆயிரம் ரொக்கப்பணம், 2மோதிரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த திருட்டில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? அல்லது கூட்டாளிகள் யாரேனும் உள்ளனரா? எனத் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். அதே போல் திருட்டில் ஈடுபட்ட இளைஞனைப் பிடிப்பதற்கு விரைந்து செயல்பட்ட காவல்துறையினருக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது