Skip to main content

''பதில் சொல்ல மறுக்கிறார்கள்... கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்''-உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் பேட்டி!

Published on 02/06/2022 | Edited on 02/06/2022

 

food safety

 

அண்மையில் கேரளாவில் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கேரள மட்டுமல்லாது தமிழக்தில் உள்ள பல்வேறு அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள யா மொய்தின் எனும் பிரபல பிரியாணி கடையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

 

உணவு பாதுகாப்புதுறை அதிகாரி சதீஷ் தலைமையில் நடைபெற்ற சோதனையில் சிக்கன், மீன் உள்ளிட்டவை கெட்டுப்போன நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கெட்டுப்போன பொருட்கள் இருந்ததை அடுத்து அந்த ஹோட்டலின் சமையலறையை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பித்துள்ளனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள். 15 நாட்களுக்கு பிறகு நடத்திய ஆய்வு குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

food safety

 

இந்த சோதனைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ், ''எங்களுக்கு வந்த புகாரில், 'வடபழனியில் உள்ள பிரபல ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கன் கொடுத்துள்ளார்கள், உடனடியாக நடவடிக்கை எடுங்கள்' என சொல்லியிருந்தார்கள். அதை பேஸ் பண்ணி இந்த கடையில் செக் பண்ண வந்தேன். இந்த கிச்சனில் வந்து செக் பண்ணும்போது பார்த்தால் டேட் முடிந்துபோன சிக்கன் நிறைய வைத்திருந்தார்கள். அந்த சிக்கனை எல்லாம் நாங்கள் கைப்பற்றி உள்ளோம். இதையெல்லாம் எடுத்து இப்போது அழித்து விடுவோம். சுமார் ஐம்பது, அறுபது கிலோ கெட்டபோன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கலாம். நாங்கள் இன்னும் வெயிட் போடவில்லை. இதில் கெட்டுப்போன இறைச்சியை லேபுக்கு  அனுப்பப் போகிறோம். கண்டிப்பாக அதன் ரிப்போர்ட் வந்தவுடனே கடை மேல் உரிய நடவடிக்கை துறை மூலமாக எடுப்போம். கெட்டுப்போன இறைச்சி குறித்து கேள்வி எழுப்பினால் அவர்கள் பதில் சொல்ல மறுக்கிறார்கள்.

 

பில் கேட்டும் இதுவரை கொடுக்கவில்லை. அதற்காக காத்திருக்கிறோம். பில் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். இப்போதைக்கு இந்த ஹோட்டலின் கிச்சனை மூட உத்தரவிட்டுள்ளோம். திரும்ப நான் வந்து சோதனை செய்வேன். இதையெல்லாம் அவர்கள் சரி செய்ய வேண்டும். 15 நாட்கள் டைம் கொடுப்போம். 15 நாட்களுக்குள் இதையெல்லாம் செய்து விட்டு எங்களிடம் ரிப்போர்ட் கொடுத்தால் தான் எனக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே இந்த கடை நடப்பதற்காக சமையல் அறையை திறந்து வைப்போம். வாடிக்கையாளர்கள் புகார் கொடுத்தாலும், நாங்களாகவும் ரேண்டமாக வந்தும் சோதனை செய்வோம். அந்த மாதிரி நிறையக் கடைகளைச் சோதனை செய்து தரமில்லாத வகையில் இருந்தால் அவற்றை மூட உத்தரவிட்டுள்ளோம். எங்கள் உணவு பாதுகாப்புத்துறையைப் பொருத்தவரை இந்த கடையை மூட வேண்டும், அவர்களது பெயரை டேமேஜ் செய்யவேண்டும் என்றெல்லாம் இல்லை. நல்ல உணவு மக்களுக்கு கிடைக்க வேண்டும். அது ஒன்றுதான் எங்களுடைய முக்கிய இலக்கு. இது போன்ற தவறுகள் இனி நடக்காது என இவர்கள் எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் பிறகுதான் சமையலறையை திறப்போம்''என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.