Advertisment

தேங்கி நிற்கும் மழைநீரால் அவதி; சேற்றை வாரி இறைத்து போராட்டம்!!

PROTEST

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள வடகரை ஊராட்சிக்குட்பட்ட நந்திமங்கலம் காலனியில் 1,000-த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

Advertisment

கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையால், தெருக்களில் மழைநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் டெங்கு, பன்றி காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால், அப்பகுதி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் தேங்கிய மழைநீரில் நின்று ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

பின்னர் அதிகாரிகள் யாரும் வராததால் சேற்றை வாரி இறைத்து போராட்டம் நடத்தி விரக்த்தியுடன் கலைந்து சென்றனர்.

villagers protest rain
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe