Advertisment

'''நாங்கள் கொண்டு வந்தோம்... இவர்கள் திறந்து வைக்கிறார்கள்''-இபிஎஸ் பேட்டி

publive-image

Advertisment

அதிமுக ஆட்சியில் தொடங்கிய பணிகளை திமுக அரசு திறந்து வைத்துக்கொண்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''திமுக அரசு பெரிய திட்டங்கள் எதையேனும் ஆரம்பித்து அதற்கான பணிகள் நடைபெறுகிறதா என்றால் இல்லை என்று தான் சொல்லியாக வேண்டும். அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது. அதைத்தான் இவர்கள் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் சட்டக் கல்லூரியில் கொண்டு வந்து அவை கட்டி முடியும் தருவாயில் இருக்கின்றன. அதை திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல்வேறு பணிகள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பணிகளை எல்லாம் முடிவுற்றதை இவர்கள் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாலங்கள், சாலைகள், புறவழி சாலைகள் இதையெல்லாம் முடிவுற்ற பணி, குறிப்பாக அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுது கொண்டுவரப்பட்ட பணிகள். தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், கிராமம் வரைக்கும் அதிகமாக இவர்கள் கமிஷன் கேட்பதால் பணிகள் முடங்கி கிடக்கின்றன'' என்றார்.

TNGovernment admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe