''தமிழகத்தில் பெரிய அளவில் மாற்றம் வரும்''-டி.டி.வி.தினகரன்!

TTV

தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பதுதொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும்என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

TTV

இந்நிலையில் சென்னை அடையாறு தாமோதரபுரம் வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் வாக்களித்த டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''தமிழகத்தில் பெரிய அளவில் மாற்றம் வரும்;மக்கள் மாற்றத்தை உருவாக்குவார்கள் என நம்புகிறேன்''என்கிறார்.

ammk tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe