Skip to main content

''அவங்க வீட்டுல ஒரு வித்தியாசமான ஊசி இருக்கு..''-பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண்ணின் மரண வாக்குமூலம்! 

Published on 01/09/2022 | Edited on 01/09/2022

 

"There is a strange needle in their house..." - The death confession of the young woman who caused a sensation!

 

சேலத்தில் கணவன் அடித்து சித்ரவதை செய்வதாக இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும், அப்பெண் கொடுத்த மரண வாக்குமூலமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த மனோன்மணி என்ற பெண்ணுக்கும், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த அரவிந்த் என்ற நபருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில் கணவன் தொடர்ந்து தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக மனோன்மணி அவரது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மனோன்மணி வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நிலையில் தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், இறுதியில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் மனோன்மணி இறக்கும் தருவாயில் கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளியான அந்த வீடியோ வாக்குமூலத்தில், ''என் ட்ரெஸ்ஸெல்லாம் கிழிச்சுட்டான். விடிய விடிய தூங்க விடுறதே இல்ல எப்போ பார்த்தாலும் ஃபியூச்சர் ஃபியூச்சர்னு சொல்லிகிட்டே இருப்பான். நிறையவாட்டி அடி வாங்கியிருக்கிறேன். அவங்க வீட்டுல ஒரு வித்தியாசமான ஊசி இருக்கு. அத எனக்கு தெரியாமல் எடுத்து எனக்கு குத்திட்டான். எனக்கு அது ஊசினு தெரியாது. அத எங்கிருந்து எடுத்தான்னு கூட எனக்கு தெரியாது. குத்தனவாட்டிதான் எனக்கு பிளட் வந்தது. அப்புறம் என்னை திட்டினான். அப்புறம்தான் எனக்கே தெரியும் அவன் ஊசி எடுத்து குத்துனது'' என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.