Skip to main content

''எங்க மாவட்டத்துக்காரன் ஒருத்தன் இருக்கான்...''-முன்னாள் அமைச்சரை வெளுத்து வாங்கிய பொன்முடி!

Published on 24/09/2022 | Edited on 25/09/2022

 

DMK

 

சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுக நிகழ்ச்சியில் பேசியிருந்த பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் திமுக முப்பெரும் விழாவில் பேசிய தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்னாள் அதிமுக அமைச்சரை வெளுத்து வாங்கினார்.

 

பொன்முடி பேசியதாவது, ''அதிமுக என்ற கட்சி இருக்கிறதா என்று தெரியவில்லை. அவர்களுக்குள்ளேயே ஆயிரம் பேர் அடித்துக் கொள்கிறார்கள். அவர்களில் ஒருத்தன் இருக்கிறான், எங்க மாவட்டத்துக்காரன். அவன் பேரு சி.வி.சண்முகம். ஒரு வக்கீல், அவன் நேற்று பேசி இருக்கான். இந்த வார்த்தைகளை எல்லாம் சொல்வதற்கே அசிங்கமாக இருக்கிறது. அவன் சொல்கிறான் ஸ்டாலின் என்னுடைய இதைக் கூட புடுங்க முடியாது என்று பேசுகிறான். அவன் எல்லாம் ஒரு லா மினிஸ்டராக இருந்தவன், சட்ட மந்திரியாக இருந்தவன். இப்பொழுது ராஜ்யசபா பார்லிமென்ட் உறுப்பினராக போய் இருக்கிறான். இவனை எல்லாம் மக்கள் மன்னித்து விடுவார்களா? தயவுசெய்து நினைத்துப் பாருங்கள்.

 

இதையெல்லாம் நினைத்து பார்த்துதான் நாம் நடந்து கொள்ள வேண்டும். அவனுக்கெல்லாம் வெறி பிடித்துப் போய்விட்டது. இனிமேல் அவனுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல எங்குமே அவன் கட்சியே கிடையாது. அவன் கட்சியே ஒழிஞ்சு போயிருச்சு. பிஜேபிகாரனுக்கு அடுத்தபடியா இவன் வருவான் போல இருக்கு. நான் அவன் இவன் என்று கூட பேசியதில்லை மரியாதையாக தான் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் நேற்று அந்த ஆள் பேசிய பேச்சை கேட்ட பொழுது நமக்கே வேகம் வருகிற அளவுக்கு பேசுகிறான் என்று சொன்னால் தமிழ்நாட்டு மக்களே எண்ணிப் பாருங்கள். தமிழகத்தை பொறுத்தவரை ஸ்டாலின் தான் திராவிடம் மாடல் ஆட்சி நடத்தக்கூடிய ஒரே தலைவர். அவரை போல் எவனாலும் முடியாது.

 

அது சில முண்டங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். வரலாறு தெரியாத நாய்களுக்கு தெரியாமல் இருக்கலாம். நானே இவ்வளவு வேகமாக பேச மாட்டேன். ஆனால் இப்படி பேச வைக்கிறார்கள் அவர்கள். அந்த அளவிற்கு அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். யார் யாரோ புதிது புதிதாக வந்து மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டிவிட்டு எப்படியாவது இந்த ஆட்சியை கலைத்து விட முடியுமா? இந்த ஆட்சியை எப்படியாவது வரவிட முடியாமல் செய்துவிட முடியுமா என்று நினைக்கிறார்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் மு.க.ஸ்டாலின் தான் தமிழகத்தில் நிரந்தர முதல்வர், இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது'' என்றார் ஆவேசமாக.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.