Skip to main content

"ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது"- நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்!

Published on 14/01/2022 | Edited on 14/01/2022

 

"There is nothing better than health" - Actor Rajinikanth tweets!

 

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். பாரம்பரிய வேஷ்டி, சேலை அணிந்து வீடுகளுக்கு வெளியே சூரியனுக்கு பொங்கலிட்டு, மகிழ்ச்சிப் பொங்க பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல் என்று கூறி பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். 

 

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 

 

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அனைவருக்கும் வணக்கம், ஒரு கஷ்டமான, ஆபத்தான சூழ்நிலையில வாழ்ந்திட்டிருக்கோம். இந்த கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிட்டிருக்கு. இதுலேருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும், எல்லா நியமங்களையும் கண்டிப்பாகக் கடைபிடிங்க, ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது. அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

இதனிடையே, சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தின் வெளியே திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அவுங்களை சாகுற வரைக்கும் ஜெயில்ல போடணும்” - ரஜினிகாந்த் ஆவேசம்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
rajinikanth latest speech

சென்னை வடபழனியில் நடந்த தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ரஜினிகாந்த். இதில் மருத்துவமனை குறித்தும் தனது உடல் நலம் குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார். 

அதன் ஒரு பகுதியாக, “25 வருஷமா நான் எந்த திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கும் போகவில்லை. ஏனென்றால், எந்த ஒரு கட்டடத்தை திறந்து வைத்தாலும் ரஜினிக்கும் அதில் பங்கு உண்டு. அந்த நிறுவனத்துடன் ரஜினிகாந்த பார்ட்னராக இருக்கிறார், அந்த நிறுவனமே ரஜினியுடைது தான் அவருடைய பினாமியில் நடத்துறாங்க என சொல்லுவாங்க. 

என் உடம்பு பல மருத்துவமனைகளிலிருந்து குணமடைஞ்சிருக்கு. அதனால் டாக்டர்கள், நர்சுகள் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. அவர்களின் உதவியினால் தான் நான் இன்னும் வாழ்ந்திட்டு இருக்கேன். ஃப்ளாட்ஸ்களுக்கு விளம்பரம் கொடுக்கும் போது, பக்கத்திலே ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், ஸ்கூல்,  மளிகை கடை, மார்க்கெட் இருக்கு என்கிறார்கள். ஆனால் மருத்துவமனை இருக்கு என யாருமே விளம்பரம் செய்வதில்லை. அது எல்லாத்தை விட மருத்துவமனை தான் முக்கியம். இப்போது யாருக்கு எந்த வயதில் எந்த நோய் வரும் என தெரியவில்லை. காத்து, தண்ணீர் என எல்லாமே மாசுபட்டுவிட்டது. குழந்தைங்க மருந்தில் கூட கலப்படம் பண்றாங்க. அவுங்களை சாகுறவரைக்கும் ஜெயில்ல போடணும்” என ஆவேசமாக பேசினார்.

Next Story

அம்பானி இல்லத் திருமண விழா; மெய்சிலிர்த்த ரஜினி

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
rajinikanth about ambani family pre wedding

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில், ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழா மிகப் பிரம்மாண்டமாக மார்ச் 1 முதல் 3 வரை நடந்து முடிந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

கோலிவுட்டிலிருந்து ரஜினி தனது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார். மேலும் இயக்குநர் அட்லீயும் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டார். இந்திய பிரபலங்களில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, சானியா நேவால் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர். பாலிவுட் பிரபலங்களில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாருக்கான், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவர்களோடு பிரபல பாப் பாடகி ரிஹானா கலந்துகொண்டுள்ளார். அவரது கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. 

இந்த நிலையில் ரஜினிகாந்த் ஜாம் நகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நமது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். நிதாவும் முகேஷ் அம்பானியும் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளை நடத்திய விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அவர்கள் கைலாசத்தையும் வைகுண்டத்தையும் இந்த உலகத்திற்குக் கொண்டு வந்துள்ளது போல் உள்ளது. ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.