Skip to main content

'1 முதல் 5 வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு இல்லை'-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Published on 02/04/2022 | Edited on 02/04/2022

 

school student

 

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு இல்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

 

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு மே மாதம் 5 முதல் 13ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். அதேபோல் ஒன்பதாம் வகுப்புக்கான செய்முறை தேர்வு மே மாதம் 2ம் தேதி முதல் 4ஆம் தேதி வரை நடைபெறும். ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 30-ஆம் தேதி வெளியிடப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு இல்லை. 2022-2023 ஆம் கல்வியாண்டு 11 ஆம் வகுப்பு தவிர பிற வகுப்புகளுக்கு ஜூன் 13 முதல் தொடங்கும். பதினொன்றாம் வகுப்புக்கு ஜூன் 24 முதல் வகுப்புகள் தொடங்கும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்