Skip to main content

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை - மா.சுப்பிரமணியன்

Published on 17/09/2022 | Edited on 17/09/2022

 

There is no shortage of medicines in Tamil Nadu - M. Subramanian

 

கடந்த சில தினங்களாக அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இருப்பில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கும் தேவையான மருந்துகள் இருப்பில் இல்லை எனவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டார். 

 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “Iv fluids மருந்துகள் சிறிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டது உண்மை. அதற்கு காரணமாக அமைந்தது உக்ரைன் போரினால் பெட்ரோலிய மூலப்பொருட்களின் விலை ஏற்றம். அதன் காரணமாக இந்த மருந்துகள் அடைக்கப்படும் பாட்டில்களின் தட்டுப்பாடு போன்ற பல்வேறு விசயங்களினால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டது. 

 

இருந்த போதிலும் தமிழக அரசு மற்றும் தமிழக மருத்துவ பணிகள் கழகம் உடனடியாக மாற்று ஏற்பாடுகளின் மூலம் அனைத்து இடங்களிலும் தட்டுப்பாடு ஆன மருந்துகளை கிடைக்க ஏற்பாடு செய்தது.

 

327 வகையான அத்தியவசிய மருந்துகள்  மற்றும் 301 வகையான சிறப்பு மருந்துகள் என இரு வகை மருந்துகள் தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் சிறப்பு மருந்துகள் மருத்துவமனைகளின் தேவைக்கேற்ப மட்டுமே கொள்முதல் செய்யப்படும். இந்த சிறப்பு மருந்துகளுக்கும் எந்த இடங்களிலும் தட்டுப்பாட்டில் இல்லை.

 

தமிழகத்திற்கு தேவையான 327 வகையான அத்தியாவசிய மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. அண்மையில் வெளிவந்த மற்றொரு செய்தி மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்திற்கு தேவைப்படும் 32 மருந்துகள் போதுமான அளவு இல்லை என செய்தி வெளிவந்தது. அந்த திட்டத்திற்கும் 3 முதல் 4 மாதங்களுக்கு தேவைப்படும் 32 வகையான மருந்துகள் அந்தந்த மாவட்டங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

 

தமிழ் நாடு முழுவதிலும் எந்த மாவட்டத்தில் தட்டுப்பாடு என யார் கருதினாலும்  அந்த மாவட்டத்து மருந்து கிடங்கில் ஆய்வு செய்வதற்கு உங்களுக்கு தாராளமாக அனுமதி வழங்கப்படும். நீங்களே வந்து சம்பந்தப்பட்ட மருந்துகள் இருக்கின்றனவா என தெரிந்து கொண்டு செய்திகளை வெளியிடலாம். இல்லையெனினும் மக்கள் 104 என்ற எண்ணிற்கு தொலைபேசி செய்து புகாரளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.