Skip to main content

சிறுபான்மையினர் நலனுக்காக தலைமைச் செயலாளர் தலைமையில் குழு; மத்திய அரசு முடிவு...

Published on 22/07/2021 | Edited on 22/07/2021

 

There is no power shortage in India"   Union Minister RK Singh answers MP Ravikumar's question

 

விழுப்புரம் தொகுதியின் உறுப்பினர் ரவிக்குமார் மக்களவையில் மின்சாரம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், "தமிழகத்தின் மின் தேவை 9221 மெகா யூனிட் என்றும் அதே அளவு சப்ளை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மின் பற்றாக்குறையே கிடையாது. இந்தியாவின் மின் உற்பத்தித் திறன் 384 ஜி.வா. ஆக உள்ள நிலையில் உச்சகட்டமான தேவை 200 ஜி.வா. மட்டும் தான்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை ரவிக்குமார் எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

அதேபோல் எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, "சிறுபான்மையின மக்கள் நலனுக்காக தேசிய அளவில் கமிட்டி அமைக்கும் திட்டம் இல்லை. சிறுபான்மையினர் நலனுக்காக மாநில அளவில் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று விளக்கமளித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீடிக்கும் அரசியல் குழப்பம்? - திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவிடம் வருத்தம் தெரிவித்த திருமாவளவன்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Thirumavalavan said We have expressed our regret to the DMK Constituency Committee

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

மேலும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர்.

அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ. ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த குழுவினர் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Thirumavalavan said We have expressed our regret to the DMK Constituency Committee

அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக நடத்திய பேச்சுவார்த்தையில் தொகுதி ஒதுக்கீடு குறித்த உடன்பாடு எட்டப்பட்டது. அதில், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் நடத்திய முதற்கட்ட பேச்சுவார்த்தையில் 2 தனித் தொகுதிகளையும், ஒரு பொதுத் தொகுதியும் கேட்டிருந்தன. இந்நிலையில், திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையே இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்பட்டது. மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக நேரம் ஒதுக்கியிருந்தும் விசிக நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. 

Thirumavalavan said We have expressed our regret to the DMK Constituency Committee

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் இன்று (02-03-24) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தேர்தல் நிதிக் குழு, தலைமையக ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, பரப்புரை குழு என 4 குழுக்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. அதில், கவுதம சன்னா தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்படும். பாவரசு தலைமையில் தேர்தல் நிதிக் குழு அமைக்கப்படும். வன்னியரசு தலைமையில் தலைமையக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். ஆளூர் ஷா நவாஸ் தலைமையில் தேர்தல் பரப்புரை ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். 

உயர்நிலைக் குழு கூட்டம் காரணமாக திமுக உடனான பேச்சுவார்த்தையில் இன்று பங்கேற்க இயலவில்லை. வர இயலாமைக்கு வருத்தம் தெரிவிப்பதாக திமுக தொகுதி பங்கீட்டு குழுவுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அதனால், ஓரிரு நாளில் திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்போம். 2 தனித் தொகுதி, 1 பொதுத் தொகுதியை கேட்டுப் பெறுவது நலம் பயக்கும் என உயர்நிலைக் குழுவில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்கை புரிதலோடு இயங்குகின்ற கட்சிகள் தான் திமுக கூட்டணியில் உள்ளன. அதனால், திமுக கூட்டணியில் உள்ளோம். திமுக கூட்டணியில் தான் தொடர்ந்து பயணிப்போம். அதில் எந்த ஊசலாட்டமும் இல்லை. 

திமுக கூட்டணியில் தான் விடுதலைச் சிறுத்தைகள் இந்த தேர்தலை சந்திக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. பரஸ்பர புரிதலில் திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் ஏற்படும். கூட்டணி கட்சிகளுக்கு இடையே எந்த இடைவெளியும் ஏற்படாது. அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி என்பது காங்கிரஸ் தலைமையில் தான் உள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஏதேனும் இடைவெளி ஏற்படும் என நினைத்து அதில் நுழையலாம் என யாரும் காத்திருக்க வேண்டாம். பா.ஜ.க - அதிமுக கூட்டணியில் எந்த செயல்பாடும் இல்லாமல் இருப்பதால் திமுக கூட்டணி பற்றி பேசுகிறார்கள். திமுக கூட்டணியில் சிறிய சிராய்ப்பு கூட ஏற்படாது. 

Next Story

ஆரணி தொகுதியும் மன்சூர் அலிகான் அறிவிப்பும்!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mansoor Alikhan is contesting from Arani constituency in 2024 parliamentary elections

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தீவிரமாக செயல்பட்டும் வருகின்றன. இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் வாக்குப் பதிவு செய்யப்படும் நாள், மற்றும் தேர்தல் வாக்கு எண்ணும் நாள் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. 

இந்த நிலையில் நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவருமான மன்சூர் அலிகான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மயிலம் மக்கள் மனம் மகிழம்பூவாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க; செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட; நான் சுகவாசி அல்ல பந்தா வாசி அல்ல. மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி! அரசியல் பொதுநல சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும் பாலூர் ஆரணியே அன்ன பட்சியே நினை என் மனதின் ஆழ்நிலை சக்தியாய் தாயார் மகளாய் துதித்து பணி செய்ய ஆணையிடுவாய். தாழ் திறவாய் தரணி போற்றும் ஆரணியே” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சினிமாவில் பயணித்துக் கொண்டே அரசியல் பணிகளிலும் கவனம் செலுத்தி வரும் மன்சூர் அலிகான், தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வந்தார். 1999 ஆம் ஆண்டு புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளராக பெரியகுளம் தொகுதியிலும், 2009 ஆம் ஆண்டு சுயேட்சை வேட்பாளராகவும், 2019 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக திண்டுக்கல் தொகுதியிலும் போட்டியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியப் புலிகள் என்ற புதிய கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார். இப்போது இந்திய ஜனநாயகப் புலிகள் எனத் தனது கட்சியின் பெயரை மாற்றியுள்ளார். இதனை டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.