Skip to main content

பொதுமக்களே பாலம் அமைத்து சடலம் சுமந்த அவலம்!

Published on 21/12/2021 | Edited on 22/12/2021

 

ெேxுி

 

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ளது பா.வெள்ளாளப்பாளையம் ஊராட்சி. இதற்குட்பட்ட சாணார்பாளையம் கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்துவருகிறார்கள். இங்குள்ளவர்கள் யாராவது இறந்துவிட்டால், சுடுகாடு கொண்டு சென்று அடக்கம் செய்ய அந்த வழியாகச் செல்லும் கீரிப்பள்ளம் ஓடையைக் கடந்து சென்று அங்குள்ள மயானத்தில் அடக்க செய்துவருகின்றனர். 

 

இதற்காக ஓடையின் குறுக்கே இருந்த சிறிய அளவிலான தரைப்பாலத்தைப் பயன்படுத்திவந்தனர். மழைக்காலங்களில் ஓடையில் அடித்துவரப்படும் கழிவுகளும் குப்பைகளும் அந்த தரைப்பாலத்தில் அடைத்துக்கொள்வதால், மழைநீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுவந்தது. இதனால் பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த தரைப்பாலத்தை அதிகாரிகள் அங்கிருந்து இடித்து அகற்றினார்கள். இதனால் யாராவது இறந்தால், பிணத்தை சுமந்துகொண்டு ஓடையில் செல்லும் தண்ணீரில் இறங்கி மயானத்திற்குச் சென்றுவந்தனர். எனவே மயானத்திற்குப் பிணத்தைக் கொண்டு செல்வதற்கு வசதியாக ஓடையின் குறுக்கே சிறிய அளவிலான பாலமாவது கட்டிக்கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல்தான் உள்ளது.  

 

இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி சாணார்பாளையத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவரின் மனைவி மரகதம் என்பவர் உயிரிழந்தார். அவருடைய உடலை மயானத்திற்குக் கொண்டு செல்வதற்காக வேறு வழியில்லாமல் அவருடைய உறவினர்களும் பொதுமக்களும் சேர்ந்து அந்த ஓடையின் குறுக்கே தற்காலிகமாக மூங்கில் பாலம் அமைத்து, மிகவும் சிரமத்திற்கிடையே பிணத்தைக் கொண்டு சென்று மயானத்தில் புதைத்தனர். பல ஆண்டுகளாக மயானத்திற்கு செல்ல போதிய பாதை வசதி இல்லாத சாணார்பாளையத்தில், கீரிப்பள்ளம் ஓடையின் குறுக்கே உடனடியாக பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோபி தொகுதி எம்.எல்.ஏ.வான செங்கோட்டையன் உட்பட பல அரசு அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்துவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“2024ல் அதிமுக வெற்றி பெறுவதற்கான நிகழ்வாக இது இருக்கும்” - செங்கோட்டையன்

Published on 09/04/2023 | Edited on 09/04/2023

 

“This will be the event for AIADMK to win in 2024” - Sengottaiyan

 

ஈரோடு மாவட்ட அதிமுக தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஈரோடு மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கம் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் கலந்து கொண்டபின் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், ““இப்போது முதல்கட்டமாக படிவம் வழங்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கட்டளையிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இந்த பணிகள் வேகமாக நிறைவேறி வருகிறது. இந்த படிவங்களை பூர்த்தி செய்த பின் அடையாள அட்டைகள் அதிமுக சார்பில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் நிகழ்ச்சியாக உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்வு அமைந்துள்ளது. திருப்புமுனையாக 2024 தேர்தல் அமையும். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை தமிழ் மண்ணில் யாராலும் அசைக்க முடியாது என்ற வரலாற்றை படைக்கும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்.

 

அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார். எந்த தொழிற்சாலைகளையும் உருவாக்கக் கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றி அங்கிருக்கும் விவசாயிகளும் பராட்டுக்கூட்டத்தை நடத்தினர். அதிமுக பாஜகவிற்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை. காலத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ப பிரதமரை சந்திப்பார்” எனக் கூறினார்.

 


 

Next Story

2026ல் அண்ணாமலை தலைமையில் பாஜக ஆட்சி? - முன்னாள் அமைச்சர் பதில்

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

Annamalai-led BJP rule in 2026? The former minister replied

 

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.

 

இந்நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு தற்போது தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் உள்ள அதிமுகவில் புதிதாக உறுப்பினர் சேர்க்கையை நேற்று மாலை துவக்கி வைத்தேன். ஏனென்றால் புனித வெள்ளியான நேற்று ஒரு நகரச் செயலாளரிடத்தில் படிவங்களைக் கொடுத்து உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தேன்.

 

இன்று அனைத்து ஒன்றிய கழகச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், பேரூராட்சி நகரச் செயலாளர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். இனி அதிமுக என்பது தமிழகத்தில் அசைக்க முடியாத ஒன்று என்று இந்த உறுப்பினர் சேர்க்கையில் உருவாக்கிக் காட்டுவோம். 

 

அண்ணாமலை தலைமையில் 2026ல் பாஜக ஆட்சி அமையும் எனச் சொல்கிறார்கள். 2026ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும். அதில் எந்த மாற்றங்களும் இல்லை. சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் பற்றி உரையாற்றியுள்ளேன். அந்த உரையை உங்களுக்கு வழங்குகிறேன்” எனக் கூறினார்.

 

தொடர்ந்து செய்தியாளர்கள், “அதிமுகவில் ஒற்றைத் தலைமை எனச் சொல்கிறீர்கள். ஆனால், பிரதமர் ஓபிஎஸ், இபிஎஸ் என இருவரையும் சந்திக்கிறார்” என கேள்வி எழுப்பியதற்கு, “அதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “குறைந்தது ஒரு தொகுதியில் 75 ஆயிரம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். குறைந்தது இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்பது இலக்கு” என்றார்.