‘சின்னக்கலைவாணர்’ என்றழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் விவேக், தான் நடித்து சமீபத்தில் வெளியான வெள்ளைப்பூக்கள் திரைப்படத்தின் வெற்றியை ‘எனக்கென்று யாருமே இல்லை’ என, சோகத்துடன் ட்விட்டரில்பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/asdfgfgfggfg.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Happy to know that vellaipookkal is still a grosser at seattle! Still housefull here! ஆனால்.. இந்த மகிழ்ச்சியைப் பகிர என் திரை ஆசான் KB, சமூக ஆசான் Dr.APJ, என் தந்தை, என் மகன் யாருமே இல்லை. (என் நண்பர்கள், ரசிகப் பெருமக்களைத் தவிர!)
தான் நடித்த பல திரைப்படங்களில் லஞ்சம், ஊழல், மூட நம்பிக்கை குறித்து சமூக சிந்தனைக் கருத்துக்களை தொடர்ந்து பேசிவரும் விவேக்குக்கு, திரைப்படத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு. ஆனாலும், சொந்த வாழ்க்கையில் மகனை இழந்த சோகத்திலிருந்து இன்னும் அவர் மீளவில்லை. அதைத்தான் ட்விட்டரில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
திரை ஆசான் கே.பாலசந்தர், சமூக ஆசான் டாக்டர் அப்துல்கலாம், தன் தந்தை, மகன் என யாருமே இல்லை என்றும், வெள்ளைப்பூக்கள் வெற்றியின் மகிழ்ச்சியை நண்பர்களிடமும் ரசிகர்களிடமும் மட்டுமே தன்னால் பகிர்ந்துகொள்ள முடியுமென்றும் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)