Advertisment

ஆதிதிராவிடர்களுக்கு நிதியில்லை!! புதுவையில் வெளிநடப்பு!!

ஆதிதிராவிட மக்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை எனசபாநாயகரை முற்றுகையிட்டுஅதிமுகவினர்தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவெளிநடப்பு செய்தனர்.

Advertisment

puducherry

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்றைய நேரமில்லா நேரத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்,

Advertisment

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தெந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என அரசு விளக்கமளிக்கவில்லை என்றும், இது தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசு செய்துள்ள அநீதி என குற்றம் சாட்டி சபாநாயகரை முற்றுகையிட்டு சிறிது நேரம் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அரசைக் கண்டித்து பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

puducherry

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இதன் பின்னர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி,

அட்டவணை இன பிரிவு மக்களுக்கு 16 சதவீத நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒதுக்கப்பட்ட நிதி முழுவதுமாக செலவிடப்படும் என தெரிவித்தார்.

admk Puducherry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe