Skip to main content

மாற்றுத்திறனாளிகளுக்கு ஜாதி மதம் இல்லை! இஸ்லாமிய ஜோடிகளுக்காக மாற்றப்பட்ட திருமணங்கள்!!

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

டிசம்பர் 3 இயக்கம், மாற்றுத் திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கம், இந்திய தொழுநோய் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், கடந்த மாதம் கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நடைபெற்றது. அதில் 14 மாற்றுத்திறன் ஜோடிகள் தேர்வாகினர். அவர்களுக்கு இன்று (16/09/2019) காலை இலவச திருமண விழா கடலூர் பாடலீஸ்வர் கோயிலில் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் சம்பத் சிறப்பு விருந்திரனாக அழைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அமைச்சர் சம்பத் ஊரில் இல்லாததால் கலந்து கொள்ளவில்லை. அதேசமயம் அ.தி.மு.கவினரும், அதிகாரிகளுடன் சீர்வரிசைகள் வழங்கி திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தனர். 

There is no caste religion for the disabled! Altered Marriages for Islamic Couples


அதேசமயம்  14 ஜோடிகளில் 1 ஜோடி முஸ்லீம் ஜோடி. வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த ரஷீத் - ஆற்காட்டை சேர்ந்த ஆப்தா பேகம் ஆகிய இந்த ஜோடியும் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்ய ஆர்வமுடன் காத்திருந்தது. ஆனால் இஸ்லாமிய ஜோடிகளுக்கு கோயிலில் திருமணம் செய்து வைக்கவோ, பதிவுச்சான்றிதழ் வழங்கவோ இயலாது என கோயில் நிர்வாகமும், ஐயரும் மறுத்துள்ளனர். ஆனால் மற்ற 13 ஜோடிகளும் நாங்கள் மாற்றுத்திறனாளிகள் என்னும் ஒற்றை இனம். எங்களுக்குள் ஜாதி, மதம் இல்லை. 14 ஜோடிகளுக்கும் ஒன்றாக திருமணம் நடக்க வேண்டும். இல்லையென்றால் வேறு இடத்தில் திருமணம் செய்து கொள்கிறோம்" என உறுதியாக இருந்தனர். அதையடுத்து அதிகாரிகளும் அ.தி.மு.க வினரும் மாற்று ஏற்பாடாக கோயிலுக்கு, வெளிப்புறமிருந்த மண்டபத்தில் வைத்து திருமணத்தை நடத்தினர்.

There is no caste religion for the disabled! Altered Marriages for Islamic Couples


14 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கும் தமிழில் மந்திரம் ஓதி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். சீர் வரிசை பொருட்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் குமரன், துணை சேர்மன் குமார், நலச்சங்க தலைவர் பொன்சண்மும், டிசம்பர் 3 இயக்க மாநில பொதுச்செயலாளர் அண்ணாமலை, மாநிலதுணைத் தலைவர் மோகன்ராஜ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சீனுவாசன் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.