Skip to main content

மாற்றுத்திறனாளிகளுக்கு ஜாதி மதம் இல்லை! இஸ்லாமிய ஜோடிகளுக்காக மாற்றப்பட்ட திருமணங்கள்!!

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

டிசம்பர் 3 இயக்கம், மாற்றுத் திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கம், இந்திய தொழுநோய் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், கடந்த மாதம் கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நடைபெற்றது. அதில் 14 மாற்றுத்திறன் ஜோடிகள் தேர்வாகினர். அவர்களுக்கு இன்று (16/09/2019) காலை இலவச திருமண விழா கடலூர் பாடலீஸ்வர் கோயிலில் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் சம்பத் சிறப்பு விருந்திரனாக அழைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அமைச்சர் சம்பத் ஊரில் இல்லாததால் கலந்து கொள்ளவில்லை. அதேசமயம் அ.தி.மு.கவினரும், அதிகாரிகளுடன் சீர்வரிசைகள் வழங்கி திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தனர். 

There is no caste religion for the disabled! Altered Marriages for Islamic Couples


அதேசமயம்  14 ஜோடிகளில் 1 ஜோடி முஸ்லீம் ஜோடி. வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த ரஷீத் - ஆற்காட்டை சேர்ந்த ஆப்தா பேகம் ஆகிய இந்த ஜோடியும் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்ய ஆர்வமுடன் காத்திருந்தது. ஆனால் இஸ்லாமிய ஜோடிகளுக்கு கோயிலில் திருமணம் செய்து வைக்கவோ, பதிவுச்சான்றிதழ் வழங்கவோ இயலாது என கோயில் நிர்வாகமும், ஐயரும் மறுத்துள்ளனர். ஆனால் மற்ற 13 ஜோடிகளும் நாங்கள் மாற்றுத்திறனாளிகள் என்னும் ஒற்றை இனம். எங்களுக்குள் ஜாதி, மதம் இல்லை. 14 ஜோடிகளுக்கும் ஒன்றாக திருமணம் நடக்க வேண்டும். இல்லையென்றால் வேறு இடத்தில் திருமணம் செய்து கொள்கிறோம்" என உறுதியாக இருந்தனர். அதையடுத்து அதிகாரிகளும் அ.தி.மு.க வினரும் மாற்று ஏற்பாடாக கோயிலுக்கு, வெளிப்புறமிருந்த மண்டபத்தில் வைத்து திருமணத்தை நடத்தினர்.

There is no caste religion for the disabled! Altered Marriages for Islamic Couples


14 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கும் தமிழில் மந்திரம் ஓதி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். சீர் வரிசை பொருட்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் குமரன், துணை சேர்மன் குமார், நலச்சங்க தலைவர் பொன்சண்மும், டிசம்பர் 3 இயக்க மாநில பொதுச்செயலாளர் அண்ணாமலை, மாநிலதுணைத் தலைவர் மோகன்ராஜ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சீனுவாசன் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.