Advertisment

'மாட்டு இறைச்சி விற்க தடையில்லை'-வெளியான விளக்கம்

'There is no ban on selling beef'-

சென்னை, மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 20.12.2024 அன்று தொடங்கிய இந்த உணவுத் திருவிழா 24.12.2024 வரை நடைபெறுகிறது. மதியம் 12.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை செயல்பட்டு வருகிறது. இதனையொட்டி ஏராளமான உணவு பிரியர்கள் இந்த உணவு திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisment

இந்த உணவுத் திருவிழாவில், கோவை கொங்கு மட்டன் பிரியாணி, கிருஷ்ணகிரி நோ ஆயில் நோ பாயில், கரூர் தோல் ரொட்டி மட்டன் கிரேவி, நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன், தருமபுரி ரவா கஜூர், நீலகிரி ராகி களி அவரை குழம்பு, திருப்பூர் முட்டை ஊத்தாப்பம், காஞ்சிபுரம் கோவில் இட்லி, சிவகங்கை மட்டன் உப்புக்கறி, புதுக்கோட்டை சுக்குமல்லி காபி, ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, வேலூர் ராகி கொழுக்கட்டை, மதுரை கறி தோசை, விருதுநகர் கரண்டி ஆம்லெட், தஞ்சாவூர் பருப்பு உருண்டை குழம்பு, திருச்சி நவதானிய புட்டு, மயிலாடுதுறை இறால் வடை, நாகப்பட்டினம் மசாலா பணியாரம், கன்னியாகுமரி பழம் பொறி, சென்னை தயிர் பூரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம் பெற்றுள்ளன.

Advertisment

இந்நிலையில் உணவு திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? என நீலம் பண்பாட்டு மையம் கேள்வி எழுப்பி இருந்தது. இது தொடர்பாக அம்மையத்தின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன?. பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிடக் கூடியவர்கள். ஆனால், திட்டமிட்டே ஓர் உணவைப் புறக்கணிக்கப்படுவதை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. உணவு எங்கள் உரிமை” எனக் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் உணவு திருவிழா நடக்கும் இடத்தில் கடை எண் 17ல் மாட்டு இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கடையின் உரிமையாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.உணவுத் திருவிழாவில்மாட்டு இறைச்சி விற்பனைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

neelam Marina Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe