Skip to main content

உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு ஏலமா?

Published on 18/09/2021 | Edited on 18/09/2021

 

Is there an auction for the post of chairman in the local elections?

 

மாவட்ட பிரிவினை காரணமாக 9 மாவட்டங்களில் நீதிமன்ற உத்தரவின்படி உள்ளாட்சித் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த மாவட்டங்களுக்கான தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். 

 

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது அடுத்த மாதம் அந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

 

அதன்படி கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய இரு மாவட்டங்களும் தேர்தலை சந்திக்கின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தில் தலைவர் பதவிக்கு 13 லட்சம் என ஏலம் விடப்பட்டு முடிவு செய்யப்பட்டதாக பரபரப்பு எழுந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

அடுத்து, தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கனங்கூர் என்ற ஊரில், மினி டெம்போவில் 25 கிலோ அரிசி மூட்டைகள் நிறைய ஏற்றப்பட்டு வீட்டுக்கு ஒரு மூட்டை என வீடுவீடாகச் சென்று கொடுத்துள்ளதாக வரஞ்சரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட போலீசார் அந்தக் கிராமத்துக்கு விரைந்து சென்றனர். போலீஸ் வருவதை அறிந்த அந்த மினி டெம்போ ஓட்டுநர் வீரமுத்து, வண்டியில் மூன்று மூட்டை அரிசி இருக்கும்போதே வாகனத்தை விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். 

 

இதையடுத்து மூன்று மூட்டை அரிசியுடன் மினி டெம்போவைக் கைப்பற்றிய போலீசார், அந்தக் கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கிராம மக்கள், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஒருவருக்கு ஆதரவாக வீடு வீடாக 25 கிலோ கொண்ட அரிசி மூட்டையை இலவசமாக வழங்கியதாக கூறியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்றாமல் பொது மக்களுக்கு அரிசி விநியோகம் செய்ததாக கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை அடுத்து மினி டெம்போ ஓட்டுநர் வீரமுத்து மீது வழக்குப் பதிவுசெய்து அவரை போலீசார் தேடிவருகின்றனர். 

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் ஆகியவற்றிற்கு ஏலத் தொகை பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகவும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மட்டும் இந்த ஊரில் ஓட்டு சீட்டு முறை தேர்தல் இருக்கும் என்றும் கூறுகின்றனர். வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய இரண்டாவது நாள் ஆங்காங்கே உள்ளாட்சிகளில் பதவியைப் பிடிக்க இலவசமாகப் பொருட்கள் வழங்கும் பணி ஒருபக்கம், ஊர் ஒற்றுமையுடன் ஊராட்சிப் பதவிகளுக்கு ஏலத் தொகை பேசி முடிக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே துவங்கி நடைபெறுவதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.