Skip to main content

இன்னும் ஒரு லட்சம் பேர் ஓட்டுபோட வேண்டி இருக்கு... நாளை தீர்ப்பு ...

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவில் மேலும் ஒரு லட்சம் பேர் வரை ஓட்டுப் போட வேண்டிய நிலை நீடிக்கிறது. யார் அந்த ஒரு லட்சம் பேர்? வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தான் அவர்கள்.  அந்த ஒரு லட்சம் பேரான அவர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் உரிமை உள்ளது. ஆனால் அதிகாரிகள் குளறுபடியால் இந்த நிமிடம் வரை தபால் வாக்குகள் அவர்களுக்கு முறையாக சென்று சேரவில்லை என்று தெரிகிறது. 

 

 There are more than 1 lakh people to vote ... tomorrow's judgment ...

 

இதுசம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் அரசு ஊழியர் சங்கம் வழக்கு போட்டது. அதன் தீர்ப்பு நாளை உயர்நீதிமன்றத்தில் வரவுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாயவன் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்து சுமார் ஒரு மாத காலம் ஆகியும் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் உரிமையை முழுமையாக தராமல் இருப்பது ஆளுங்கட்சியின் சர்வாதிகாரம். 

 

 There are more than 1 lakh people to vote ... tomorrow's judgment ...

 

ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளிலும் சராசரியாக ஒரு தொகுதியில் சுமார் 20 ஆயிரம் வாக்குகள், இந்த வாக்குகள் பெரும்பாலும் இந்த ஆட்சிக்கு எதிரான மனநிலையில் விழும் என்பதாகும் இந்த வாக்குகளை புறக்கணிப்பதிலேயே இந்த அரசு கவனம் செலுத்துவதாகவும் ஆகவேதான் இன்னும் ஒரு லட்சம் பேர் வாக்கு செலுத்தாமல் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று மாயவன் கூறியுள்ளார்.

 

 

நாளை இதன் தீர்ப்பு வந்த பிறகு அரசு ஊழியர்களில் ஒரு லட்சம் பேரின் வாக்குகள் வாக்குப்பெட்டி வருமா என்பது தெரியும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.