Skip to main content

2014 இல் நரேந்திர மோடி கூறியதில் ஏதாவது செயலாக்கத்திற்கு வந்துள்ளதா? - கி.வீரமணி கேள்வி

Published on 30/06/2018 | Edited on 30/06/2018

2014 இல் நரேந்திர மோடி கூறியதில் ஏதாவது செயலாக்கத்திற்கு வந்துள்ளதா? வங்கிகளின் வாராக் கடன், கருப்புப் பணம் அதிகரிப்பு, ரூபாய் மதிப்பின் சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம்தான் சாதனைகளா? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். 
 

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
 

ஒரு நாட்டின் பொருளாதார நிலையை மதிப்பிட வேண்டுமானால், அந்நாட்டின் வங்கிகளில் பணப் பரிவர்த்தனை, ஏற்றுமதிமூலம் அந்நியச் செலாவணி (Foreign Exchange) ஈட்டல், ரூபாயின் மதிப்பு, வெளிநாட்டுக்கடன் - இவைகளையெல்லாம் வைத்து மொத்த உற்பத்தி வருவாய் எப்படி GDP என்ற Gross Domestic Product என்பதையும் கணக்கிட்டு, வளர்ச்சி விகிதத்தையும் கணக்கிடுவார்கள்.

 

 

 

2014 இல் மோடி கொடுத்த வாக்குறுதிகள் என்ன? 2014 இல் மத்திய அரசில் பிரதமர் மோடி தலைமையில் பதவியேற்ற ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அரசில் கொடுத்த வாக்குறுதிகள் அநேகம்:

1. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்து, 2 கோடி பேருக்குப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடுவோம்.

2. கருப்புப் பணம் - உள்நாட்டில் நடமாடும், வெளிநாட்டில் வங்கிகளிலும் பதுங்கியிருக்கும் கருப்புப் பணத்தை இந்தியாவுக்குள் வரவழைப்போம் - அந்தத் தொகையிலிருந்து ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவாம்.
 

3. வலுவான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கிடுவோம்.
இன்னும் பல....

20 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு!

1. நான்கு ஆண்டுகள் முடிந்து பொதுத் தேர்தலைச் சந்திக்க இன்னும் ஒரே ஒரு ஆண்டு (2019 இல் தேர்தல்)தான் எஞ்சியுள்ளது. இந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில், நாட்டின் வங்கிகளின் நிலை என்ன? ஷெட்யூல் வங்கிகள் முதல் பிற வங்கிகள்வரை, வாராக் கடன்கள் (இந்து ஏட்டின் தலையங்கத்தின் தமிழாக்கம் தனியே  காண்க), வர்த்தக வங்கிகளில் உள்ள மொத்தக் கடன்கள் விகிதம் 11.6 சதவிகிதத்திலிருந்து (மார்ச் 2018) 12.2 ஆக உயர்ந்து வங்கிகளின் (மார்ச் 2019 இல்) செயல்பாட்டை வெகுவாகப் பாதிக்கும் அபாய நிலை உருவாக உள்ளது என்று அண்மையில் வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் நிதி நிலைத்தன்மை அறிக்கை (Financial Stability Report) கூறுகிறது. கடந்த 20 ஆண்டு காலத்தில் வர்த்தக வங்கிகளில் இந்த அளவுக்கு பாதிப்புக் கடன் (Bad Debts ) அளவு நிலவியதே இல்லை!
 

2. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளில் - குறிப்பாக உடனடி சரி செய்திடும் திட்டத்தின் (Prompt Corrective Action)) கீழ் உள்ள வங்கிகளில் உள்ள வாராக் கடன் விகித அளவு 21 சதவிகிதத்திலிருந்து 22.3 சதவிகிதமாக உயர்ந்திடும் அபாயம் உள்ளது!
 

Is there any progress in the 2014 Narendra Modi statement?



 

ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை!

ரிசர்வ் வங்கி எச்சரிக்கை செய்துள்ளது - அது என்ன?
வெளிச் சூழலில் உள்ள நிலவரங்களால் நாட்டுப் பொருளாதாரத்திற்கும், வங்கிகளின் செயல்பாட்டாலும் ஏற்படும் விளைவுகள் இவை!

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.7 விழுக்காடு அளவிலேயே நிற்குமா? அல்லது மேலும் கீழிறக்கத்திற்குச் செல்லுமா என்று கவலையுடன் சிந்திக்கவேண்டியுள்ளது.

3. வெளிநாட்டு வங்கிகளிலேயே அதிகமாக பணம் போடப்படும் வங்கி சுவிஸ் வங்கிகள்தான் என்பது உலகறிந்த செய்தி. அதிலிருந்து கருப்புப் பணத்தை மீட்டெடுப்போம் என்று மோடி அரசு கூறிய நிலையில், அதிர்ச்சி அடையத் தக்க வகையில் செய்திகள் சுவிட்சர்லாந்திலிருந்து வருகின்றன.

 

 

பா.ஜ.க. ஆட்சியில் கடந்த ஆண்டில் இந்தியர்களின் கருப்புப் பணம் பதுக்கல் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று செய்திகள் நேற்று முன்னாள் (28.6.2018) வந்துள்ளது! (சுமார் 7 ஆயிரம் கோடி டாலர்கள் உள்ளே சென்று ஜாம் ஜாம்மென்று அமர்ந்துள்ளது). கருப்புப் பண வேட்டையின் துரித கதி, அதிதீவிர நடவடிக்கை என்றெல்லாம் பிரதமர் மோடியும், அவரது சகாக்களும் உரத்த குரலில் கூறியது என்னவாயிற்று?
 

இந்திய ரூபாய் மதிப்பின் சரிவு!

முன்பு 60 விழுக்காடு பெண்கள் வங்கிக் கணக்கு வைத்திருந்தனர்; இப்போது 80 விழுக்காடாக கணக்கு வைத்திருப்பது உயர்ந்துள்ளது என்று  வானொலி, ஊடகங்களில் இடைவிடாத விளம்பரம் செய்வதற்கும், மேற்காட்டிய தகவலுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? இந்திய ரூபாயின் மதிப்பு 1.1.2018 இல் ஒரு டாலருக்கு ஈடாக 63.68 ரூபாய்; இது இப்போது மேலும் (ஆறு மாத காலத்தில்) சரிந்து 68.79 ரூபாயாக ஆகியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அதற்கு மேலும் சரிந்து நேற்று 69.10 ரூபாயாக ஆகியுள்ளது. உலகச் சந்தையில் பெட்ரோலியப் பொருள் விலை ஏறும் நிலையில், அமெரிக்க கெடுபிடியில் - நாம் இறக்குமதி செய்யும் அளவுக்கு முன்பைவிட பல மடங்கு கூடுதல் பணம் தரவேண்டியிருக்குமே! இந்தியாவிற்கு வந்து முதலீடு செய்தவர்கள் மிகக் குறைந்த லாபம் அல்லது வட்டிக் கணக்கு வரவு குறையும் நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்குப் பதிலாக, அவை வேறு நாடுகளுக்குப் பறந்துவிடும் அபாயமும்உள்ளதே!
 

விலைவாசி ஏறவும், பண வீக்கம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

தானடித்த மூப்பாக - பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு  (Demonetisation) கொள்கையால் - எந்த அளவுக்குக் கருப்புப் பணம் வெளியே வந்து, பொருளாதாரத்திற்கு ஏற்றத்தை அளித்தது என்ற கேள்விக்குத் திருப்தியான பதிலைத் தர முடியவில்லையே!

 

 

 

அமித்ஷா இயக்குநராக உள்ள வங்கியில் நடந்ததென்ன?

அண்மையில் ஒரு செய்தி! பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இயக்குநராக இருந்த அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் பண மதிப்பிழப்பு அறிவித்தவுடன் 755 கோடி ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளன என எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு எந்தப் பதிலும் பா.ஜ.க. தரப்பில் தரப்படாதது ஏன்? இப்படி பலவும் நாட்டின் பொருளாதார சீர்குலைவை நோக்கிச்  செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுவதாகவே உள்ளன. பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். பிரதமர் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கை - செயல்பாடு - படுதோல்வி அடைந்துள்ளது என்பதைத்தானே காட்டுகிறது? வரும் பொதுத் தேர்தலில் நிச்சயம் இதன் பிரதிபலிப்புப் புரியும்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சில உண்மைகளை சொன்னதால் எதிர்கட்சிகள் பீதியடைந்துள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Opposition parties panics because some truths have been told

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

PM Modi says Opposition parties panics because some truths have been told

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (23-04-24) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் பாடலைக் கேட்பது கூட குற்றமாகிவிடும். இந்த முறை ராம நவமி அன்று முதல் முறையாக ராஜஸ்தானில் ஷோபா யாத்திரை ஊர்வலம் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் போன்ற மக்கள் ராம்-ராம் எனக் கோஷமிடும் மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்துள்ளது.

இன்று அனுமன் ஜெயந்தி அன்று உங்களுடன் பேசும் போது, சில நாட்களுக்கு முன் எடுத்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், கடையில் அமர்ந்து ஹனுமான் பாடலை கேட்டதால், கடைக்காரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். நேற்று முன்தினம் ராஜஸ்தானில், நான் சில உண்மையை நாட்டுக்கு முன் வைத்தேன். ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும் பீதியடைந்து உள்ளது. உங்களின் சொத்துக்களை அபகரித்து, சிறப்பு வாய்ந்தவர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை நான் முன்வைத்தேன்.

அவர்களது அரசியலை நான் அம்பலப்படுத்தியதும், அவர்கள் மிகவும் கோபமடைந்து, அவர்கள் என்னை அவதூறாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதை நான் காங்கிரஸிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஏன் தங்கள் கொள்கையை இவ்வளவு மறைக்கிறார்கள். நீங்களே கொள்கையை உருவாக்கியபோது, இப்போது அதை ஏற்க ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

Next Story

“பெண்கள் தாலியை இழக்க நேரிடும்” - சித்தராமையா மகன் பரபரப்பு கருத்து

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Siddaramaiah son If BJP comes to power, women will lose their thali

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

Siddaramaiah son If BJP comes to power, women will lose their thali

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தை கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார்.

இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. ஆனால், பாஜக ஆதரவாளர்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேசிய பழைய வீடியோ ஒன்றை கட் செய்து சமூக வலைத்தளங்களில் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் தங்கள் தாலியை இழக்க நேரிடும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மகனுமான யதீந்திரா சித்தராமையா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

Siddaramaiah son If BJP comes to power, women will lose their thali

கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மகனும், கர்நாடகா எம்.எல்.ஏவுமான யதீந்திரா நேற்று (22-04-24) மைசூரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பிரதமர் மோடி ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் குறித்து மிகவும் இழிவாக பேசியுள்ளார். மத உணர்வைகளை தூண்டும் வகையில் பேசியிருக்கிறார். தேர்தல் ஆணையம் ஏன் கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கிறது என்று தெரியவில்லை. 70 ஆண்டுகளாக பல்வேறு கட்சிகள் ஆட்சி செய்துள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஒரு இந்துக்களுக்கும் அநீதி ஏற்படவில்லை.

பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்துப் பெண்கள் தங்களது தாலியை இழப்பது மட்டுமல்லாமல், அனைத்து தாய்மார்களும் தங்கள் கணவனை இழக்க நேரிடும். பெண்கள் எந்த மதத்தையும் பொருட்படுத்தாமல் கணவன் மற்றும் குழந்தைகளை இழக்க நேரிடும். பா.ஜ.க நாட்டில் வகுப்புவாத வன்முறையை உருவாக்குகிறது. அவர்கள் மக்களை மத அடிப்படையில் போராட வைக்கிறார்கள். போராடுவதன் மூலம் மக்கள் தங்கள் உயிரை இழக்கிறார்கள். அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் பெற்று, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தவில்லை.