Skip to main content

பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நிகழாமல் இருக்க பூரண மதுவிலக்கு அவசியம் - விஜயா ரகாட்கர்

Published on 23/07/2018 | Edited on 23/07/2018
bjp

 

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நிகழாமல் இருக்க வேண்டுமென்றால் பூரண மதுவிலக்கு அவசியம் என்று பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி விஜயா ரகாட்கா் கூறியுள்ளாா். 


             மூன்று நாள் சுற்றுபயணமாக தமிழகம் வந்துள்ள பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி விஜயா ரகாட்கா் நேற்று(22.7.2018) திருச் நடந்த மகளிரணி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு இன்று(23.7.2018) நாகா்கோவிலில் நடந்த மகளிரணி சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டாா்.


          அப்போது அவா் செய்தியாளா்களிடம் பேசும் போது... தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளா்ந்து வருகிறது. கிராம புற பெண்கள் அதிகம் போ் பா.ஜ.க வில் இணைந்து வருகிறாா்கள். 2021 சட்டமன்ற தோ்தலில் பா.ஜ.க வின் பங்களிப்பு பொிய அளவில் இருக்கும். அந்த தோ்தலில் பா..ஜ.க ஓரு தனிதன்மையை ஏற்படுத்தும். 

 

bjp


             பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கும் கல்விக்கும் பா.ஜ.க அரசு  அதிக அக்கரை எடுத்துள்ளது. பெண்கள் முன்னேற்றத்துக்கான முத்ரா வங்கி கடன் தமிழகத்தில் அதிகம் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் பெண்களின் ஆரோக்கிய முன்னேற்றதிற்காக நாடு முமுவதும் கழிவறைகள் மத்திய அரசால் கட்டப்பட்டு வருகிறது. பெண்களின் பேறு கால விடுமுறை 28 வாரங்களாக உயா்த்தப்பட்டுள்ளது. 


            பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழும்  போது மத்திய அரசு இரும்புகரம்  கொண்டு அதை தடுக்கிறது. போக்சோ சட்டத்தை இன்னும் கடுமையாக்கும் விதமாக அதில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பெண்களை மதிக்ககூடிய அவா்களின் முன்னேற்றத்துக்காக மோடி அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்கொடுமைகள் தடுக்க பட வேண்டுமென்றால் இங்கு கண்டிப்பாக பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றாா். பேட்டியின் போது தேசிய மகளீரணி பொதுச் செயலாளா் வழக்கறிஞா் விக்டோாியா கௌாி உடன் இருந்தாா்.
                                 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.