Skip to main content

தேனி விஷன்... அறிமுக விழாவில் ஓபி.ரவீந்திரநாத்குமார்!

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

தேனியில் உள்ள அதிமுகவினர் சார்பாக பெரியகுளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் தலைமையில் நகர்கழக உறுப்பினர்கான நன்றி அறிவிப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமை தாங்கினார். 

 

 Theni Vision ... Opening Ceremony

 

இந்த கூட்டத்தில் இறுதியாக பேசிய எம்.பி. ரவீந்திநாத்குமார், தமிழகத்தின் சார்பாக நான் ஒரே நபராக இருப்பதை என்னை எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர். அனைத்து மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் எனது செயல்பாடுகள் இருக்கும். தேனி மாவட்டத்தின் நீண்ட நாள் திட்டமான போடி மதுரை அகல இரயில் பாதை திட்டப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓராண்டிற்குள் இத்திட்டம் முழுமைபெறும். அதற்கு அடுத்தபடியாக திண்டுக்கல் முதல் லோயர்கேம்ப் வரை புதிய இரயில் பாதை திட்டம் குறித்து மத்திய இரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

 

 Theni Vision ... Opening Ceremony


அதற்கான ஆரம்பகட்ட பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற அலுவகத்திற்குள் நான் சென்றவுடன் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு வணக்கம் வைத்தேன், அவர்களும் எனக்கு வணக்கம் வைத்துவிட்டு எங்கள் பக்கம் வந்துவிடுங்கள் என கூறினார்கள். நான் அண்ணே உங்கள் வேலைய நீங்கள் பாருங்க நான் என் வேலைய நான் பார்க்கிறேன் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். 

தேனி பாராளுமன்ற தொகுதியை தமிழகத்தின் முதன்மையான தொகுதியாக மற்றுவதற்கான அனைத்து் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். ஆதற்காக ''விசன் தேனி'' தேனி பார்லிமெண்ட் கான்ஸ்டிடுயன்ட் டிவலப்மெண்ட் என்ற புதிய அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளேன். இந்த அமைப்பு மூலம் தேனி மாவட்டத்தின் அனைத்து வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்தப்படும் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விரைவில் துணை முதல்வர் இந்த திட்டத்தினை துவங்கி வைப்பார் என கூறினார். இக்கூட்டத்தில் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் பெரும்திரளாக கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.